காரிய சித்தி மந்திரம்

success manthiram
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பல காரியங்களை செய்வார். தன்னுடைய முன்னேற்றத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்காகவும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் செய்யக்கூடிய காரியமே முழுமையான வெற்றி அடையும். அப்படிப்பட்ட காரியங்களில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வெற்றி அடைய உதவக்கூடிய தெய்வத்தையும், மந்திரத்தையும் பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ராசிகள் இருக்கிறது. அந்த ராசிகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகிறது என்று கூறலாம். அப்படி இருக்கும் பொழுது அவர்களின் ராசிக்கேற்றப்படி அவர்களின் காரியத்தை ஜெயிக்க வைக்க கூடிய தெய்வத்தையும் மந்திரத்தையும் தெரிந்து செயல்பட்டால் கண்டிப்பான முறையில் அந்த காரியத்தில் வெற்றி என்பது ஏற்படும். குறிப்பாக அந்த காரியம் யாருக்கும் எந்தவித கெடுதலும் நினைக்காத நல்ல காரியமாக இருந்தால்தான் இந்த வழிப்பாடும் மந்திரமும் உபயோகப்படும் என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் முருகப் பெருமானை வழிபட்டு விட்டு “ஓம் ஹிரீம் வஸியும்” என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு உச்சரித்துவிட்டு செல்ல காரிய சித்தி ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள் விஷ்ணு துர்க்கை வழிபட்டுவிட்டு “ஓம் ஸ்ரீம் சித்திதா நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் பெருமாளை வழிபட்டு விட்டு “ஓம் ஐம் வசியும் சுவாஹா” என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு செல்ல வேண்டும்.

கடக ராசிக்காரர்கள் சிவன் கோவிலில் இருக்கும் அம்பாளை வழிபட்டு விட்டு “ஓம் ஸிப்பியோ நிவராய வசியும் சுவாஹா” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் காளி அம்மனை வழிபட்டு விட்டு “ஓம் க்லீம் ஹ்ரீம் பிரகாசாய வசியும் சுவாஹா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் ரங்கநாதரை வழிபட்டு விட்டு “ஓம் ஸ்ரீம் ஐம் ஓம் வசி வசியும் சுவாஹா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு விட்டு “ஓம் தனுர் பத்ம ஸ்ரீம் அனுகிரக சித்திதா சுவாஹா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபட்டு விட்டு “ஓம் ஹம்ச சோக நிவராய காரிய சித்திதா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டுவிட்டு “ஓம் ப்ரகஸ்பதயே சவ்வும் சுவாஹா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மகர ராசிக்காரர்கள் விநாயகரை வழிபட்டு விட்டு “ஓம் யோக ஸ்ரம் இரட்சகம் காரிய சித்தினே நமோ நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு “ஓம் வம் ஹம் ரீம் நிவராய காரிய அணுகூல சித்திதா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மீன ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட்டு விட்டு “ஓம் ஸ்ரீம் ஐம் ஐம் ஸ்ரீம் ஓம் காரிய சித்திதா நமோ நமஹா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தெய்வத்தை அனுதினமும் வழிப்பட்டு இந்த மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சிறப்புக்குரியது. இதே போல் நல்ல காரியங்களுக்கு செல்லும் பொழுது அந்த காரியங்களில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பொழுதும் இப்படி தெய்வத்தை வழிபட்டு விட்டு மந்திரங்களை தங்களால் இயன்ற அளவு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறி பிறகு செல்ல அந்த காரியம் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம்

மிகவும் எளிமையான இந்த மந்திர வழிபாட்டை நாமும் நம்முடைய ராசிக்கேற்றார் போல் வழிபட்டு காரிய வெற்றி பெறுவோம்.

- Advertisement -