நினைத்த காரியம் முடிய தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது

wakeup dog deepam
- Advertisement -

இன்று பெரும்பாலான குழம்பும் ஒரே வார்த்தை நான் நினைத்தால் மட்டும் எதுவும் நடப்பதில்லை. எனக்கு மட்டும் நல்லதே நடக்காது. எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் இப்படியான வார்த்தைகளை தினம் தினம் ஒவ்வொருவரும் புலம்பி கொண்டே தான் நாட்களை கடத்துகிறோம். இதைப் பெரியவர் சிறியவர் என எல்லா வயதினரும் செய்கிறார்கள்.

இதற்கு நம்முடைய கிரக நிலைகள் நேரம் சரியில்லாது போன்றவை காரணமாக அமைந்தாலும் நம்முடைய மனநிலையும் இதில் முக்கிய காரணமாக உள்ளது. இப்படியே நாம் தினமும் புலம்புவதால் அது போலவே நம்முடைய நாட்களும் நகர ஆரம்பித்து விடுகிறது. இதனால் தான் எண்ணங்கள் நல்லவையாக இருப்பீன் நடப்பவையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்லி வைத்தார்கள்.

- Advertisement -

ஆகையால் இதுபோல புலம்பிக்கொண்டே இருக்காமல் இன்றைய நாள் எனக்கு நல்லதாக இருக்கும் என்று நினைத்து அந்த நாளை தொடங்க வேண்டும். இது ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியலும் கண்டறிந்த ஒரு உண்மை. அத்துடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுடைய மனநிலை கிரக நிலை இரண்டும் மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

காரிய தடை நீங்க

இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது தூங்கி எழுந்தவுடன் நம்முடைய முதல் அடியை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் நீங்கள் படுக்கும் வரை படுக்கும் இடம் எப்படி ஆனதாக இருந்தாலும், எழுந்தவுடன் முதல் நான்கு அடியாது கிழக்கு நோக்கி எடுத்து வைக்க பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய அந்த அன்றைய நாளை தடையில்லாமல் நகர்த்த உதவி புரியும்.

- Advertisement -

அடுத்து உணவு அருந்த பத்து நிமிடங்களுக்கு முன்பு அமர்ந்து உங்களுடைய சுவாசத்தை அமைதியாக உணருங்கள். இதனால் உங்களுடைய மனநிலை சீராகும் மூளை சுறுசுறுப்பு அடையும். நீங்கள் நினைக்கும் காரியம் அனைத்தும் நல்ல முறையில் செய்யக் கூடிய ஆற்றல் உங்களுக்கு வரும்.

இதை செய்த பிறகு வீட்டின் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள். அந்த தீபத்தை உங்கள் கையில் ஏந்தி பூஜை அறையில் தீபாராதனை காட்டுவது போல காட்டி இந்த தீபம் பிரகாசமாக எரிவது போல் என்னுடைய இன்றைய நாள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த பிறகு விளக்கை குளிர்வித்து நீங்கள் வெளியில் செல்லுங்கள்.

இவையெல்லாம் செய்த பிறகு வெளியில் ஏதேனும் ஒரு வாய் இல்லாத ஜீவனுக்கு உங்களால் இயன்ற ஏதாவது ஒன்றை வாங்கி கொடுங்கள். யாரேனும் ஒருவருக்கு பசியாற உணவளிக்க முடியுமானாலும் செய்யலாம். முடியாதவர்கள் இது போல சிறிய அளவிலான ஒரு தானத்தை செய்யுங்கள். இது உங்களுடைய அந்த நாளில் இருக்கும் அத்தனை தடைகளும் உடைத்து தோல்வியே நெருங்காமல் வெற்றியைக் காண வழிவகுக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் பலிக்க பரிகாரம்
இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கி வாழ்க்கை பிரகாசமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை செய்தால் நமக்கு தடைகளே வராதா என்று கேட்டால் தடைகள் நிச்சயம் வரும். ஆனால் அதை தகர்த்தெறிந்து முன்னேறி செல்வதற்கான ஆற்றலையும் அனுகிரகத்தையும் இது போன்ற பரிகாரங்கள் தரும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையும் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -