வேண்டுதல் பலிக்க பரிகாரம்

amman2
- Advertisement -

வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை என்னுடைய இந்த கோரிக்கை மட்டும் நிறைவேறவே மாட்டேங்குது என்று நாம் சொல்லுவது உண்டு. உங்களுடைய நிறைவேறாத அந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகார முறையைத்தான் பார்க்கப் போகின்றோம்.

வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் நினைத்தது பலிக்க வேண்டும் என்றால், உண்டியலில் எதை போடுவது. ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக்கோங்க. அதன் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவிடுங்க. நடுவுல ஒரு மஞ்சள் பொட்டு வச்சிடுங்க. உங்களுடைய கோரிக்கையை அந்த காகிதத்தில் எழுதுங்கள். நீல நிற பேனாவில் எழுதி விடுங்கள்.

- Advertisement -

இந்த பேப்பருக்கு நடுவே ஒரே ஒரு வெற்றிலை, அந்த வெற்றிலை நடுவே ஒரு ரூபாய் நாணயம், ஒரு விரலி மஞ்சள் வைத்து, இந்த பேப்பரை அப்படியே சுருட்டி நூல் போட்டு கட்டிக்கோங்க. உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு போங்க.

அம்மன் கோவில் இல்லை எனும் பட்சத்தில் வேறு ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலுக்கு சென்று அந்த சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூ போட்டு உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கோவிலை வலம் வந்து வழக்கம் போல வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த கோவிலில் கொஞ்ச நேரம் அமருங்கள். உங்களுடைய பிரார்த்தனையை அம்பாளிடம் சொல்லுங்கள். ஒரு பிரார்த்தனையாக இருக்கட்டும். கையில் நீங்கள் எடுத்துச் சென்ற அந்த பேப்பரும் இருக்கணும். வழிபாட்டை முடித்துவிட்டு நமஸ்காரம் செய்து விட்டு, அந்த கோவில் உண்டியலில் இந்த பேப்பரை போட்டுவிட்டு வரவேண்டும்.

சுருட்டி மடித்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த பேப்பர். அதன் உள்ளே வெற்றிலை இருக்கு, ஒரு ரூபாய், விரலி மஞ்சள் இருக்குது. இப்படி உங்களுடைய வேண்டுதல் நிறைவேற உண்டியலில் இந்த காணிக்கையை போடும்போது, சீக்கிரம் பிரார்த்தனை நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான வழிபாடுதான்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு

உங்களுடைய பிரச்சனையை நிச்சயம் அந்த அம்பாள் கூடிய சீக்கிரம் தீர்த்து வைக்க இது ஒரு எளிமையான வழி. சில பேர் சீட்டு கட்டி, மரத்தில் எல்லாம் கட்டுவார்கள். பார்த்திருக்கிறீர்களா, அதே போல் தான் இந்த பரிகாரம். ஒரு ரூபாய் காணிக்கையை வைத்து நாம் இதை உண்டியலில் செலுத்துகின்றோம். இதை நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பளிக்க அந்த அம்பாள் நிச்சயம் கண் திறப்பாள் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -