நமக்கு மட்டும் எதுவும் நல்லாத நடக்க மாட்டேங்குதே என்று நினைக்கிறவங்க ஒரு துண்டு வசம்பை இப்படி மட்டும் பயன்படுத்தி பாருங்க. இதுவரை உங்களுக்கு நடக்காத நம்மையெல்லாம் நடக்கும்.

success
- Advertisement -

நமக்கு மட்டும் எப்போதும் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறதே நாம் தொட்ட எந்த காரியமும் நல்லதாக முடிவதில்லையே போன்ற மன அழுத்தம் பெரும்பாலும் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதற்கெல்லாம் நம்முடைய எண்ணங்கள் தான் முதல் காரணம் என்றாலும், நம்முடைய கர்மாக்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. உங்களின் கர்ம வினைகளின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதன் தாக்கம் உங்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் வெளிப்படும். அப்படியானால் இதையெல்லாம் சரி செய்யவே முடியாதா என்று கேள்வி எழும். அதற்கும் ஆன்மீகம் ஒரு எளிய தாந்த்ரீக முறையை தந்திருக்கிறது. அதைப் பற்றி தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நினைத்த காரியம் வெற்றி அடைய
ஒரு மனிதன் முதலில் பணம் பேர் புகழ் அனைத்தையும் சம்பாதிப்பதற்கு முன்பாகவே அவர்கள் ராசியானவர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அப்படி இருந்தால் மட்டும் தான் நாம் வேலை தேடி போனாலும் வேலை கிடைக்கும். நல்ல காரியம் பேசினாலும் அது நல்ல முறையில் முடியும். இப்படி நம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி முதலில் நாம் அதற்கு ராசியானவர்களாகவும், தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒருத்தரை ராசிக்காரராக மாற்றக் கூடிய அற்புத சக்தி இந்த வசம்பிற்கு உள்ளது என்று சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் வசம்பு இல்லாத வீடே கிடையாது. இதை பிறந்த குழந்தைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள். இந்த வசனத்திற்கு தீயதை அழிக்கும் சக்தி உண்டு. இன்றளவும் பெரும்பாலோ நான் இதை பயன்படுத்துகிறார்கள். இந்த வசம்பில் ஒரு பொட்டு வைத்தால் போதும் குழந்தைகளுடம் எந்த கெட்ட சக்தியும் நெருங்காது என்பது நம் முன்னோர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. இப்போது இந்த பரிகாரத்திற்கும் நாம் வசம்பு தான் பயன்படுத்த போகிறோம்.

இந்த வசம்பை பொருத்த வரையில் நாம் பெயர் சொல்லாதது என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது தான் இதற்கான பலன் அதிகமாக கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. நாட்டு மருந்து கடையில் சென்று வசம்பை வாங்கிக் கொள்ளுங்கள். பேரம் பேசாமல் அவர்கள் சொல்லும் விலை கொடுத்து வாங்கி வந்து விடுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு மண் அகலில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். அந்த தீபச்சுடரில் நீங்கள் வாங்கி வந்த வசம்பை சிறிது நேரம் தீயினால் காட்டினால் கருத்து விடும். அதன் பிறகு இந்த வசம்பை எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் நெய்யில் தொட்டு எடுங்கள். அதன் பிறகு இதை உங்கள் மோதிர விரலால் தொட்டால் மை போல கருப்பாக வரும். இது உங்கள் உச்சந்தலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் பொழுது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகள் தீய எண்ணங்கள் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கி நீங்களே ஒரு நல்ல பாசிட்டிவான வழியில் செல்வீர்கள். இந்த மையை நீங்கள் வைத்துக் கொண்டு வெளியில் எந்த காரியத்திற்காக சென்றாலும் அதில் உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும். ஏனெனில் இந்த மை பரிகாரத்தை செய்யும் போது உங்களுடன் இருக்கும் ஆற்றல் அந்த அளவிற்கு வெளிப்படும் இது தான் இந்த பரிகாரத்தில் உள்ள சிறப்பு.

இதையும் படிக்கலாமே: ஆடி ஞாயிறு இந்த தானம் செய்ய மறக்காதீர்கள்! கோடி புண்ணியம் தரும் தானம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் தெரியுமா?

நீங்கள் எதை நினைத்து செய்தாலும் அந்த காரியம் வெற்றியில் முடிய இந்த பரிகாரம் மிகவும் உதவி செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வசம்பு பரிகாரத்தை செய்து உங்கள் வாழ்க்கையில் ஒளிமயமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -