நாளை 23/7/2023 ஆடி ஞாயிறு இந்த தானம் செய்ய மறக்காதீர்கள்! கோடி புண்ணியம் தரும் தானம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் தெரியுமா?

amman-koozh-gold
- Advertisement -

ஆடி மாதத்தில் வரிசையாக வரக்கூடிய முக்கிய நாட்களில் ஆடி ஞாயிறும் ஒன்று! ஆடி செவ்வாய், ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு ஆகியவை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் நாட்களாக இருக்கிறது. அதில் இந்த ஆடி ஞாயிறு தான் தானம் செய்யக்கூடிய நாளாக கருதப்படுகிறது. ஆடி ஞாயிறு என்ன தானம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடிப்பூரமான இன்று வளையல் தானம் செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதும், அன்னை ஆண்டாள் அவதரித்த நாளான இன்று ஆண்டாளை தரிசனம் செய்து வழிபட்டு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது. ஆடி மாதத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கக்கூடிய இந்த ஆடிப்பூரத்தில் வளையல் மாலையை அணிவித்து அம்மனுக்கு வெகு விமரிசையாக அலங்காரங்கள் செய்வது உண்டு. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல் விரைவாக நிறைவேறுமாம்.

- Advertisement -

அதே போல ஆடி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடிய தானமானது கோடி புண்ணியத்தை கொடுக்கக் கூடியது ஆகும். இந்த நாளில் தான் கூழ் வார்த்து பக்தர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் நாம் பூஜை செய்து தானம் செய்கிறோம். முருங்கைக் கீரை, வாழைக்காய், காராமணி, கருவாடு, கொழுக்கட்டை, கத்திரிக்காய், மொச்சை, கேழ்வரகு கூழ், மாவிளக்கு ஆகியவை கொண்டு பதார்த்தங்கள் தயாரித்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் கொடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு முக்கிய விசேஷமாக இருக்கிறது. இதில் தானம் கொடுப்பவர்களுக்கும், தானம் வாங்குபவர்களுக்கும் பெரும் புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் இது போல தானம் கொடுக்க முடியாதவர்கள் சாதாரணமாக உங்களால் முடிந்த அளவிற்கு உணவு பொட்டலங்களை வாங்கி இல்லாத மற்றும் ஏழை, எளியவர்களுக்கு தானம் கொடுக்கலாம். அன்னதானம் செய்வது என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் நீங்கள் செய்யும் சிறு தானமும் மிகப்பெரிய பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

- Advertisement -

எல்லா வகையான ஜீவராசிகளும் இந்நாளில் பசியாறுவதாக புராணங்கள் கூறுகிறது எனவே பசியில் வாடும் எந்த ஒரு ஜீவ ராசிக்கும் நீங்கள் அன்னதானம் செய்யலாம். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பசு மாடு, நாய், பூனை, பறவைகள் என்று எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் நீங்கள் உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்தால் இந்நாளில் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் பெரும் நன்மை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
குளிக்கும்போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் நம் உடம்பை பிடித்த தரித்திரம், பீடை, கண் திருஷ்டி விலகும். சுறுசுறுப்பாக வேலை செய்ய எதுவும் தடையாக வந்து நிற்காது.

ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் ஞாயிறு ரொம்பவும் விசேஷமானது. அது மட்டுமல்லாமல் வரக்கூடிய அத்தனை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நீங்கள் உங்களால் முடிந்த ஒருவருக்கேனும் அன்னதானம் செய்தால் ஜாதக தோஷங்கள் விலகி, கை கூடாத அத்தனை யோகங்களும் கைகூடி வரும். எல்லோருக்கும் எல்லா விதமான யோகங்களும் அமையப் பெறுவது இல்லை, ஆனால் நாம் செய்யும் புண்ணியமானது இந்த தோஷங்களை நீக்கி நமக்கு எதிர்பாராத நன்மைகளை கொடுக்கக் கூடியது எனவே எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான தர்மங்களை செய்து இந்நாளின் மூலம் புண்ணியங்களை தேடிக் கொள்வோம்.

- Advertisement -