நீங்க தொட்டதெல்லாம் துலங்க வெற்றி தரும் வெற்றிலையில் ஓன்றை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

- Advertisement -

மனிதனின் எண்ணங்கள் எப்போதும் நாம் நினைப்பவை எல்லாம் நடக்க வேண்டும் என்று ஏங்கும். இப்படி நம்முடைய வாழ்க்கை ஒரு மேஜிக் போல கேட்டதெல்லாம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். இப்படி நினைப்பது இயற்கையான ஒரு விஷயம் தான். யார் தான் நாம் நினைப்பது நடக்க கூடாது என்று யோசிப்பார்கள். இனி நீங்கள் என்ன நினைத்து ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி பெற வெற்றிலையை இப்படி பயன்படுத்தினால் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காரியத் தடை நீங்க பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு புதிதாக பறித்த அல்லது வாங்கிய வெற்றிலை ஒன்று மட்டும் இருந்தால் போதும். நல்ல வெற்றிலை ஒன்றை எடுத்துக் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் இந்த பரிகாரத்தை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் தொடங்கி விடலாம். இதற்கு நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியது கிடையாது. இதற்கு சுத்தப்படுத்திய வெற்றிலையை உங்கள் பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி முதலில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இந்த வெற்றிலையின் மீது முழுவதுமாக விளக்கெண்ணெய் தடவி விடுங்கள். அதன் பிறகு ஒரு அகல் வைத்து அதை ஏற்றி விடுங்கள். இப்போது அந்த கற்பூரத்தின் அனலில் வெற்றிலையை காட்ட வேண்டும் அப்போது வெற்றிலையில் இருக்கும் எண்ணெய் உருகி கற்பூரத்தின் அனலும் சேர்ந்து கருப்பு நிற மை போல உருகி கிடைக்கும். இதை அப்படியே ஒரு சின்ன தட்டில் அல்லது எரிந்து முடிந்த பிறகு அந்த அகலிலே கூட இந்த வெற்றிலையை வைத்து விடுங்கள். இந்த வெற்றிலை வாடிவிட்டால் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு இதே போல் நீங்கள் அடுத்த வெற்றிலையில் எண்ணெய் தடவி கற்பூரம் அனலில் காட்டி பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இனி நீங்கள் எப்போது எந்த காரியமாக வெளியில் சென்றாலும் இந்த மையை உங்கள் நெற்றியில் வைத்த பிறகு செல்லுங்கள். நீங்கள் முடிய வேண்டும் என்று நினைத்த காரியம் அனைத்தும் நல்லபடியாக முடியும். அது தேர்வாக இருந்தாலும் சரி அல்லது வேலை தொடர்பான விஷயமாக இருந்தாலும் சொத்து நிலம் தொடர்பான வழக்கு விவரமாக இருந்தாலும் கூட இந்த மை உங்கள் நெற்றியில் இருக்கும் போது உங்களுக்கான வெற்றி யோகத்தை ஈர்த்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கணவர் கண்முன்னே இந்த பொருளை வைத்தால், மனைவி கையில் கட்டு கட்டாய் பணம் சேரும். கணவர் அடிக்கடி பார்க்க வேண்டிய அந்த பொருள் என்ன?

நாம் நினைத்ததெல்லாம் நடந்து முடிப்பது என்பது சாதாரண காரியம் கிடையாது. அத்தனை பெரிய விஷயத்தை இது போன்ற ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தின் மூலம் நம்மால் செய்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை நீங்களும் நம்பிக்கையுடன் செய்து நீங்கள் தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றிக் கான எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -