கணவர் கண்முன்னே இந்த பொருளை வைத்தால், மனைவி கையில் கட்டு கட்டாய் பணம் சேரும். கணவர் அடிக்கடி பார்க்க வேண்டிய அந்த பொருள் என்ன?

cash-murugan
- Advertisement -

கணவர் சம்பாதித்த பணத்தை மனைவி கையில் தான் கொடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். கணவரிடமிருந்து வாங்கிய பணத்தை மனைவி அனாவசியமாக எந்த வீண் விரைய செலவும் செய்யக்கூடாது. ஊதாரித்தனமாக செலவும் செய்யக்கூடாது. தேவையான செலவுக்கு போக, மீதம் இருக்கும் பணத்தை மிச்சம் பிடித்து எடுத்து வைக்க வேண்டும்.

கணவருக்கு கையில் காசு இல்லை என்று சொல்லும் போது, மனைவியாகிய வீட்டு மகாலட்சுமியாகிய, நீங்கள் தான் உங்கள் கையில் இருக்கும் சேமிப்பை கொடுத்து உதவ வேண்டும். இந்த ஆசை எங்களுக்கும் இருக்கு. ஆனால் கணவர் சம்பாதித்து வந்து கொடுக்கும் பணத்தை எங்களால் சேமிக்க முடியவில்லை, நிறைய வருமானம் வருது. ஆனால் செலவாகி விடுகிறது, என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

என்னுடைய கணவருக்கு வருமானமே ரொம்ப குறைவாக இருக்கிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வருமானமே இல்லை, கணவருக்கு நல்ல வேலை இல்லை, நல்ல வேலை கிடைத்து வருமானம் பெருக வேண்டும், என்று நினைக்கும் மனைவிமார்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அற்புதம் வாய்ந்த இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக காசு பணம் உங்களுடைய வீட்டில் தங்கும். மனைவி கையில் கட்டு கட்டாய் பணம் புரளும்.

மனைவி கையில் பணம் சேர செய்ய வேண்டிய பரிகாரம்:
கணவர் அடிக்கடி பார்க்கும்படி இந்த பொருளை வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த பொருள். வேறு எதுவும் கிடையாது. முருகர் படம்தான். அழகாக அலங்காரம் செய்து கொண்டிருக்கும், சின்ன அளவில் இருக்கும் முருகர் படத்தை வரவேற்பறையில் கூட வைக்கலாம். அந்த முருகர் படத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஜாதிக்காயை போட்டு விடுங்கள். கணவர் முருகரை பார்க்கும்போது அவர் கண்ணுக்கு ஜாதிக்காயும் தெரிய வேண்டும். உங்களுடைய கணவர் இந்த முருகர் படத்தையும் ஜாதிக்காயையும் பார்க்க பார்க்க அவருக்கு வருமானம் அதிகரிக்கும்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் கணவர் தூங்கி எழுந்த பிறகு, அவர் முதலில் கண் விழிக்க கூடிய விஷயம் இந்த முருகர் படமும், ஜாதிக்காயாகவும் இருக்க வேண்டும். படுக்கை அறையில் நீங்கள் படுக்கும் இடத்திற்கு கொஞ்சம் பக்கவாட்டில் ஒரு அலமாரியிலோ அல்லது வேறு ஏதாவது மேஜை மேலோ முருகன் படத்தையும் ஜாதிக்காயையும் ஒன்றாக வைத்து விடுங்கள். உங்கள் கணவர் எழுந்தவுடன் முதலில் இந்த இரண்டு பொருட்களில் கண்களை விழிக்க சொல்லுங்கள். நிச்சயமாக கணவருக்கு இருக்கக்கூடிய பணத்தடை விலகும்.

எளிமையான பரிகாரம் தான் இது. ஆனால் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இத்தனை நாட்கள் இந்த பரிகாரத்தை செய்த பின்பு உடனடியாக பலனை எதிர்பார்க்கக் கூடாது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். சந்தோஷமாக கணவரோடு குடும்பம் நடத்தி வாருங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவை செய்யவே செய்யாதிங்க.

இதையும் படிக்கலாமே: பணத் தேவை பூர்த்தி அடைய வெள்ளிக்கிழமையில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன? இதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

கணவரை கண்டபடி திட்டாதீர்கள். பிறகு பாருங்கள் மனைவியாகப்பட்ட உங்களுடைய கையில் நிச்சயம் மகாலட்சுமி தங்குவாள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -