நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

vinayagar manthiram
- Advertisement -

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடக்கும். அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று புரியாமல் இருப்பார்கள. அவர்கள் எப்போதும் போல தான் உழைத்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுடைய பணிகளை செய்து கொண்டிருப்பார்கள் அப்படி இருக்கையில் இந்த திடீர் மாற்றம் எப்படி என யோசிப்பதில் நியாயம் தானே.

நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் விதிப்படி தீர்மானிக்கப்பட்டது தான். இதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் விதியையே மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இறைவனிடத்தில் உள்ளது. அந்த இறைவனை எப்படி வணங்கினால் நம்முடைய விதி பலன்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை தான் இப்பொழுது நாம் மந்திரம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

தெய்வங்களிலே மிக எளிமையான தெய்வம் எனில் அது விநாயகர் தான். கூப்பிட்ட மாத்திரத்தில் வந்து நிற்கக் கூடிய அற்புதமான சக்தி வாய்ந்த கடவுள். அப்படியான விநாயகர வணங்குவதற்கு என நாம் பெரிய அளவில் எந்த சிரமங்களையும் மேற்கொள்ள தேவையை இல்லை. இத்தனை சிறப்புமிக்க விநாயகரை நம்முடைய காரியங்கள் நிறைவேற எப்படி வணங்குவது என்று தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு காரியத்தை நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இது ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கும். சிலர் வீடு கட்ட வேண்டும் என்றும், அடுத்து நகை சேர்க்க வேண்டும். ஒரு சிலர் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதன் பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இப்படி என தேவைகள் அடுத்தடுத்து மாறிக் கொண்டே தான் இருக்கும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு இது நடந்து விடும் ஒரு சிலருக்கு எதிர் நினைத்தாலும் நடக்கவே நடக்காது அனைத்திலும் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். நமக்கு மட்டும் எதுவும் நடக்காது என்று வெறுத்து விடுவார்கள். அப்படியானவர்கள் கூட விநாயகரை நினைத்து தினமும் இந்த மந்திரத்தை மூன்று முறை சொன்னால் போதும். வாழ்க்கையில் அவர்கள் முடியாது என நினைத்த காரியம் அனைத்தும் முடிந்து விடும்.

ஓம் கம் கணபதி போற்றி

என்ற இந்த மந்திரத்தை தினமும் உங்கள் பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை சொன்னால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை எல்லாம் பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நவகிரகத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

எந்த ஒரு வழிப்பாடும் ஒரு நாளில் பலனை தந்து விடாது இந்த மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து சொல்லும் பொழுது நீங்கள் விரும்பிய யாவும் உங்களை வந்து அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகரின் பரிபூரண அருளோடு உங்களுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -