நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்க மிளகு பரிகாரம். முக்கியமான வேலைக்கு வெளியே கிளம்புவதற்கு முன்பு இதை செய்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

milagu
- Advertisement -

முக்கியமான வேலைக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூரம் பயணத்தில் எந்த தடையும் வரக்கூடாது. போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு வெளிநாட்டில், அல்லது வெளியூரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அந்த வேலையில் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்றாலும், வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது இன்றைக்கு முக்கியமான வேலைக்கு போகப் போறீங்க.  உதாரணத்திற்கு ஒரு இன்டர்வியூக்கு போறீங்க. பொண்ணு பாக்க போறீங்க. புது ஆர்டர் வாங்க போறீங்க, பிசினஸ் டெவலப் பண்ண போறீங்க. லோன் கேட்டு போறீங்க, இப்படிப்பட்ட நல்ல காரியம் வெற்றி அடைய வேண்டும், எந்த தடையும் வந்து விடக்கூடாது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இப்படியாக பயணங்கள் வெற்றியை கொடுக்க, காரியத்தடை வராமல் இருக்க, வெளியே செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகாரம் தான் இது. இதை செய்தால் நீங்கள் போகக்கூடிய காரியம் 100% உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

காரிய தடையை நீக்கும் மிளகு பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒன்பது மிளகு தேவை. ஒன்பது மிளகு கையில் எடுத்துக் கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வந்து விடுங்கள். நிலை வாசலுக்கு உள்ளே இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. கிழக்கு பார்த்தவாறு நின்று, முதலில் கையில் இருக்கும் மிளகை நான்கு திசைகளில் ஒவ்வொன்றாக தூக்கி போட வேண்டும். கிழக்கு பக்கம் ஒன்று, மேற்கு பக்கம் ஒன்று, வடக்கு பக்கம் ஒன்று, தெற்கு பக்கம் ஒன்று. 4 திசைக்கு 4 மிளகுகள்.

அடுத்ததாக வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மீதம் இருக்கும் நான்கு மிளகையும் இந்த நான்கு திசைகளில் தூக்கிப்போட்டு விடுங்கள். மீதம் ஒரு மிளகு இருக்கும் அல்லவா. அதை ஆகாயத்தை பார்த்தவரு தூக்கிப்போட்டு விட்டு, நீங்கள் வெளியே செல்ல வேண்டும். மேலே போன மிளகு கீழே விழுந்து விடும். எந்த திசையில் விழுந்தாலும் அதை பற்றி கவலை இல்லை.

- Advertisement -

ஒன்பது மிளகை இப்படி தூக்கி போட்டு விட்டு நீங்கள் எந்த வேலைக்கு சென்றாலும் சரி, நீங்கள் செல்லக்கூடிய அந்த வேலை நிச்சயமாக வெற்றியை தரும். பயணங்களில் எந்த தடையும் ஏற்படாது. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் எந்த தடையும் ஏற்படாது. நல்லபடியாக ஒரு காரியம் நடந்து முடிய வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு இந்த மிளகு பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நன்மை நடக்கும்.

எப்போதுமே ஒரு நல்ல விஷயத்திற்கு வெளியே செல்வதற்கு முன்பு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களோடு வெளியே கிளம்ப வேண்டும். வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை சாப்பிட்டு விட்டு வெளியே செல்லலாம்.

இதையும் படிக்கலாமே: அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருக்கும் பொல்லாத கண் திருஷ்டியை அடியோடு விரட்ட நிலை வாசலில் இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் போதும்.

உதாரணத்திற்கு ஒரு சாக்லேட் சாப்பிட்டா கூட சரிதான். வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. வீட்டில் மூத்தவர்கள் இருந்தால் அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே கிளம்புவது ரொம்ப ரொம்ப நல்லது. பாசிட்டிவ் எனர்ஜி தான் வெற்றியை கொடுக்கும். மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -