அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருக்கும் பொல்லாத கண் திருஷ்டியை அடியோடு விரட்ட நிலை வாசலில் இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் போதும்.

vasal
- Advertisement -

கண் திருஷ்டி ஆனாது பில்லி சூனியம் இவையெல்லாம் விட கொடுமையானது. இவைகள் கூட கொஞ்சம் பொறுமையாக தான் வேலை செய்யும். இந்த கண் திருஷ்டியானது பார்த்த உடனே வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்படி மோசமான கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் இன்று அம்மவாசை நாளில் இந்த தீபத்தை நிலை வாசலில் ஏற்றி வைத்தால் எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய் விடும் என்று சொல்லப்படுகிறது. அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

இன்று செவ்வாய்க்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை மங்கள வார அமாவாசை என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் கண் திருஷ்டிக்கான பரிகாரங்களை செய்யும் பொழுது அது பல மடங்கு பலனை அளிக்கக் கூடியது. அது மட்டும் இன்றி செவ்வாய்க் கிழமை செவ்வாய் அங்கார காரனுக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மவாசை பரிகாரத்தை செய்யும் பொழுது நமக்கு இருக்கும் பிணி தோஷங்கள் எல்லாம் கூட நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது திருஷ்டி நீங்க ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய பூசணிக்காய், சிவப்பு திரி நல்லெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். முதலில் வாங்கி வந்த பூசணிக்காவை கழுவி சுத்தம் செய்து இரண்டு சமபாகமாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூசணிக்காய் சிறியது பெரியதாக நறுக்க கூடாது. பூசணிக்காய் உள்ளே இருக்கும் விதை சதை பகுதிகள் எல்லாம் நீக்கி விட்டு விளக்கு ஏற்ற தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் நிலை வாசலில் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூசணிக்காயை நிலை வாசலில் வைத்து தான் தீபம் ஏற்ற வேண்டும் எனவே பூசணிக்காய் வைக்கும் இடத்தையும் சுத்தமாக துடைத்து விட்டு மஞ்சளால் மூழ்கி பொட்டு வைத்து அங்கும் ஒரு கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் பூசணிக்காய் சுற்றிலும் மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைத்து சிகப்பு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அத்துடன் உங்களிடம் வந்து மூலிகை எண்ணெய் இருந்தால் அதையும் சேர்த்து ஊற்றிய பிறகு நிலை வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் மீது சிறிய தட்டு அல்லது அகல் வைத்து அதன் மேல் இந்த பூசணிக்காய் வைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபத்தை இன்று இரவு வரை வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பூசணிக்காயை மறுநாள் காலையில் யார் கால்களும் படாத இடத்தில் எடுத்து போட்டு விட்டு, நீங்கள் மஞ்சள் குங்குமம் போட்டு முழுங்கிய இடத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

கண் திருஷ்டியைபோக்க எத்தனையோ பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரமானது சக்தி வாய்ந்த பரிகாரம். பூசணிக்காய் வைத்து நாம் பைரவருக்கு தான் தீபம் ஏற்றுவோம். எதிரிகளை வெல்ல பிரச்சனைகள் தீர என அனைத்து வேண்டுதல்களுக்கும் இந்த பூசணிக்காயை வைத்து தான் ஏற்றுவோம். அதே பூசணிக்காய் நம் வீட்டு நிலை வாசலில் கண் திருஷ்டி நீங்க ஏற்றும் போது இதற்கான பலன் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். துன்பத்தைகளை தூள் தூளாக்கும் அற்புத மந்திரம்.

இந்த பூசணிக்காய் தீபத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இன்று அமாவாசை நாளில் உங்கள் வீட்டில் நிலை வாசலில் இந்த தீபத்தை ஏற்றி உங்களின் பொல்லாத கண் திருஷ்டியை போக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -