காரிய தடை விலக விநாயகர் வழிபாடு

pillaiyar1
- Advertisement -

பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து சாஸ்திரத்தில் இந்த வழிபாடு நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. உங்களுடைய வீட்டிலும் காரியத்தடை இருக்கிறதா.

ஏதாவது ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலே போதும். வீட்டில் சண்டை சச்சரவு வந்து விடுகிறது. அந்த நல்ல காரியத்தை நடத்த விடாமல் நாளும் கோளும் கெட்டது செய்கிறது என்பவர்கள், விநாயகரை ஏழு நாள் தொடர்ந்து இப்படி கும்பிடுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் அந்த காரியத்தடை விலகும். நல்லது நடக்கும். சரி காரிய தடையை விளக்கப் போகும் அந்த பிரத்தியேகமான விநாயகர் வழிபாட்டை வீட்டில் இருந்தபடி எப்படி செய்வது.

- Advertisement -

காரிய தடை நீங்க விநாயகர் வழிபாடு

ஒரு வீட்டில் எந்த சுவாமியின் படம் இருக்கிறதோ இல்லையோ இந்த பிள்ளையாரின் திருவுருவப்படம் ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக இருக்கும். அந்தப் பிள்ளையாருக்கு தனியாக தீபம் ஏற்ற வேண்டும். முதலில் இதற்கு ஒரு திரி தயார் செய்யணும். சாதாரண பஞ்சு திரியோடு, ஒரு வெட்டிவேரை சேர்த்து திரித்து, திரி தயார் செய்து கொள்ளுங்கள்.

மண் அகல்விளக்கில் விநாயகருக்கு உகந்த தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நாம் தயார் செய்திருக்கும் இந்த வெட்டிவேர் பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு மாதுளை பழத்தை வாங்கி உரித்து அதில் இருக்கும் முத்துக்களை ஒரு கிண்ணத்தில் போட்டு விநாயகருக்கு நிவேதியமாக வையுங்க.

- Advertisement -

காரியத்த தடையை உடைக்க விநாயகருக்கு இந்த மாதுளை பழத்தை நெய்வேதியமாக வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்களுக்கு ஜாதகத்தால் கிரக சூழ்நிலையால் நல்லது நடக்க மாட்டேங்குது, எதைத் தொட்டாலும் தோல்வி என்று இருந்தால், இந்த மாதுளை பழம் நிவேதனம் தான் சிறப்பான பரிகாரமாக இருக்கும். ஒரு திங்கட்கிழமை இந்த வழிபாட்டை தொடங்குங்கள். அன்றிலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் தீர கல் உப்பு பரிகாரம்

தொடர்ந்து ஏழு நாட்கள் விடாமல் விநாயகரை நினைத்து வீட்டிலேயே இந்த வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் காரியத்தடை உடையும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். புதிய முயற்சிகளில் இருக்கும் காரிய தடையை சரி செய்யவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற தகவல் உடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -