சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத் தடையும் வராது. செருப்பு போடுவதற்கு முன்பு இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

sanibagavan
- Advertisement -

நிறைய பேருக்கு வாழ்க்கையில் புதியதாக தொடங்கக் கூடிய காரியங்கள் தடையாகவே இருக்கும். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தடை. முயற்சி செய்து, ஒரு வேலையை செய்து பார்த்தால் தான் வெற்றி-தோல்வி என்னவென்று நமக்கு தெரியும். ஆனால் சில பேரால் சில காரியங்களை தொடங்கவே முடியாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்ய பல முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் அந்த வேலையைத் ஆரம்பிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். இப்படிப்பட்ட காரிய தடையை கொடுப்பவர் சனிபகவான். சனி பகவானால் நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய தடையை சரிசெய்ய சுலபமாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றிய குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

அடுப்புக்கரி என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை ஆன்டி க்ளாக் வைஸ் ஒன்பது முறை சுற்றி அந்த அடுப்பு கரியை குப்பையில் தூக்கி போட்டு விட்டு அதன் பின்பு நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் உங்களுக்கு சக்சஸ் தான்.

- Advertisement -

உங்களுக்கு அடுப்புக்கரி கிடைக்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு உள்ளங்கையில் வைத்துக் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு ஸ்பூன் எள்ளு உள்ளங்கையில் வைத்துக் கொண்டு தலையை 9 முறை இடமிருந்து வலம் சுற்றி அந்த எள்ளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு செல்லுங்கள்.

அடுப்புக் கரியை கையில் லேசாக தொட்டால் அந்த கரி ஒட்டிக்கொள்ளும் அல்லவா. அந்த கறியை புருவ முடியல் அல்லது தலை முடியில் லேசாக தடவிக்கொண்டு சென்றாலும் காரியத் தடை விலகும். ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு செய்வதும் காரிய தடையை விலக்கும். மேல் சொன்ன பரிகாரங்களில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் நல்ல பலன் உண்டு. மூன்று பரிகாரங்களை ஒன்றாக சேர்த்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.

- Advertisement -

பின் சொல்லக்கூடிய பரிகாரம் கொஞ்சம் வித்தியாசமான பரிகாரமாக தான் இருக்கும். இருப்பினும் இந்த பரிகாரத்திலும் ஒரு சின்ன சூட்சமம் மறைந்துதான் உள்ளது. கழிவறையை சுத்தம் செய்ய நீல நிற பொருளை பயன்படுத்துங்கள். அதாவது இன்றைக்கு நீங்கள் வெளியே ஏதோ ஒரு முக்கியமான காரியத்திற்காக செல்ல போகிறீர்கள். அந்த காரியம் தடைபடக்கூடாது என்றால், வெளியே கிளம்புவதற்கு முன்பு கழிவறையில் நீல நிற ஹேர்பிக்கை கூட கொஞ்சம் ஊற்றிவிட்டு செல்லலாம். காரிய தடைக்கு, நிச்சயமா இந்த பரிகாரம் கூட நல்ல பலனைத் தான் கொடுக்கும்.

காரியத்தடை அடிக்கடி வருது, அப்படின்னா வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது உங்களுடைய செருப்பை ஒரு முறை தண்ணீரில் கழுவி விட்டு அதன் பின்பு அந்த செருப்பை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். அப்போது காரியதடை வராமல் இருக்கும். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நீங்கள் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது செருப்பை கழுவி வைத்தாலும் பரவாயில்லை. வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது, செருப்பை போடுவதற்கு முன்பு, ஒரு முறை செருப்பை கழுவி விட்டு உடனடியாக அந்த செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியில் சென்றால் காரியத் தடை விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல ரொம்பவும் தேய்ந்த, ரொம்பவும் கிழிந்துபோன காலணிகளைப் பயன்படுத்த கூடாது. காலணிகள் ரொம்பவும் பழையதாகி விட்டாலோ, தேய்ந்து விட்டாலோ அதை உடனடியாக மாற்றி விடுங்கள்.

குறிப்பாக சனி பகவானால் தோஷம், சனி பகவானால் வாழ்க்கையில் நிறைய பிரச்சனை என்று சொல்லுபவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தில் உங்களுக்கு எது சுலபம் என்று படுகிறதோ, அதை செய்து பாருங்கள். அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு முறை ஒவ்வொரு பரிகாரத்தை முயற்சி செய்யலாம். நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -