காரிய தடை விலக பைரவர் வழிபாடு

bairavar1
- Advertisement -

கடன் சுமை விலக, கெட்ட சக்திகளிடமிருந்து விடுபட, எதிரி தொல்லை நீங்க, எப்படி பைரவர் வழிபாடு சிறந்ததோ, அதே போல தான் காரிய தடை விலகவும் பைரவரை வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு வேலை முடியவே மாட்டேங்குது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம்.

தடையாகவே இருக்கிறது என்னும் பட்சத்தில், பைரவரை வழிபாடு செய்யும்போது, அந்த காரிய தடையானது உடனடியாக விலகும். சிவனின் அம்சம் கொண்ட இந்த பைரவருக்கு எப்படிப்பட்ட பெரிய கஷ்டத்தையும் போக்கக்கூடிய சக்தி உள்ளது. சரி, காரியத்தடையை போக்கும் அந்த பைரவர் வழிபாட்டை நாமும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

காரிய தடை விலக பைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு என்றாலே ஞாயிற்றுக்கிழமை தான். ராகுகால வேலை தான். மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். மாலை 6:00 மணிக்கு மேலே பைரவரை வழிபாடு செய்தாலும் தவறு ஒன்றும் கிடையாது. கூடுமானவரை ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவர் வழிபாட்டை செய்வது சிறப்பு.

சரி ராகுகால நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை பைரவர் சன்னிதானத்திற்கு சென்று விட்டீர்கள்‌. அங்கு 9 மண் அகல் விளக்குகளில் இலுப்பெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். வீட்டிலிருந்து செல்லும்போது ஏலக்காய் மாலை கட்டி எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரண ஏலக்காய் கிடையாது. கருப்பு ஏலக்காய், கடைகளில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்சம் பெருசாக கருப்பு நிறத்தில் ஏலக்காய் இருக்கும். இந்த கருப்பு ஏலக்காயை ஒரு நூலில் கோர்த்து மாலையாக தயார் செய்து கொள்ளுங்கள். கணக்கு உங்களுடைய விருப்பம் தான். இந்த ஏலக்காய் கொஞ்சம் விலை கூடுதலாக தான் இருக்கும். 11, 21, 51, 101, 108 இப்படி ஏதாவது ஒரு கணக்கில் மாலை கட்டி போடலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த மாலையை பைரவருக்கு சாத்தி உங்களுடைய பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

என்ன காரியம் முடியாமல் இருக்கோ அந்த காரியத்தை சீக்கிரம் நடத்திக் கொடு பைரவா என்று சிறிது நேரம் அந்த கோவிலில் அமர்ந்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை முடித்த அடுத் நாட்களுக்குள் உங்களுக்கு இருந்த காரியத்தடை விலகிடும். எந்த ரூபத்தில்லாவது ஒரு நல்ல வழியை அந்த பைரவர் காட்டிக் கொடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டியை நீக்கும் படிகார கல் பரிகாரம்

சித்தர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்ற அதி அற்புதம் வாய்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. கருப்பு ஏலக்காய்க்கு அப்படி ஒரு பவர் இருக்குங்க. நீங்க வேணும்னா இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -