வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று செல்வந்தராய் வாழ ஆசைப்பட்டால் இந்த தீபத்தை தினமும் ஐந்து நிமிடம் பார்த்தாலே போதும். உங்களை தோற்கடிக்கும் எதுவும் உங்களை நெருங்காமல் செல்வந்தராய் வாழலாம்.

success man dheepam cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மனிதருடைய எண்ணங்களும் எதிர்மறை சிந்தனையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே நேர்மறையாக சிந்தித்து நல்ல முறையில் முன்னேறுவதையே மறந்து விட்டனர். எல்லாவற்றுக்குமே எதிர்மறையாகவே சிந்தித்து சிந்தித்து நேர்மறை என்கிற ஒரு எண்ணம் இருப்பதையே மறந்து விட்டனர். இந்த ஒரு தீபத்தை தினமும் வீட்டில் ஏற்றி வரும் பார்க்கும் போது நம்முடைய எண்ணங்கள் தெளிவடைந்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் உயர்ந்து நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் பாசிட்டிவான எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பே இது நடக்காது, முடியாது எனக்கு இதெல்லாம் வராது என்பது போன்ற நெகடிவ்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தாலே நம்முடைய வாழ்க்கை பாதை முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இப்போது பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்க நாம் வீட்டில் ஏற்ற வேண்டிய இந்த தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த தீபத்தை பூஜையறை, வரவேற்பறை, குழந்தைகள் படிக்கும் அறை என எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். அதே போல் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நாள், கிழமை, நேரம் எதையும் பார்க்க வேண்டியது கிடையாது. உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அந்த சமயத்தில் இந்த ஒரு தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றலாம்.

காரிய வெற்றிக்கு ஏற்ற வேண்டிய தீபம்:
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு அகல் விளக்கு, பஞ்சு திரி, நல்லெண்ணெய் கொஞ்சம் சீரகம் இவை மட்டும் தான் தேவை. இந்த விளக்கை நன்றாக துடைத்து சுத்தம் செய்த பிறகு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்ட பிறகு சீரகத்தை அதில் போட்டு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபத்தின் முன்பு சிறிது நேரம் அமர்ந்து அதன் ஒளியை நாம் நேரடியாக பார்க்க வேண்டும். இப்படி பார்ப்பதன் மூலம் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் யாவும் நீங்கி நேர்மறை எண்ணங்கள் நம்முள் தோன்றும் என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை ஏற்றிய விளக்கை மறுமுறை ஏற்றும் போது சுத்தம் செய்து பிறகு மறுபடியும் புதிதாக எண்ணெய், சீரகம், திரி, அனைத்தும் போட்டுத் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

சீரகம் என்றாலே அகத்தை சீராக்குவது என்று தான் பொருள். அப்படியான இந்த சீரகத்தை வைத்து ஏறும் போது நம் அகத்தினுள் இருக்கும் அழுக்குகள் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சிந்தனைகள் அனைத்துமே நீங்கி நல்ல ஒரு நேர்மறையான சிந்தனைகள் வளரும். அது மட்டுமின்றி நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் கூட நீங்கி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சொல்லப்படுகிறது.

உள்ளத்தில் இருக்கும் இது போன்ற தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் நீங்கி விட்டாலே நம்முடைய வாழ்க்கையின் பாதையை நம்மால் சரியாக அமைத்துக் கொள்ள முடியும். அத்துடன் இந்த தீபத்தின் மூலம் வீட்டில் இருக்கும் தேவையற்ற எதிர் மறை ஆற்றலும் வெளியேறும் பொழுது நிச்சயம் நம்முடைய முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: நம் வாழ்க்கையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கர்மா! இதை 9 விதிகளில் எப்படி நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது?

இந்த தீப முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை ஏற்றி பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -