கர்ம வினை தீர முருகர் வழிபாடு

murugan2
- Advertisement -

நாளும் கோளும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இறை வழிபாடு செய்வது மட்டும்தான் ஒரே வழி. ஜாதகம் நல்லாத்தான் இருக்கு. இதே ஜாதகத்தில் பிறந்த பல பேர் கோடிஸ்வரராக இருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் கஷ்டப்பட என்ன காரணம்.  உதாரணத்திற்கு பிரபலங்கள் பிறந்த அதே நேரத்தில், இன்னும் எத்தனை பேர் இந்த பூலோகத்தில் பிறந்திருப்பார்கள்.

ஆனால் அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் பெரிய அளவில் முன்னேற என்ன காரணம். ஜோதிடம் உண்மை என்றால் அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேரும் ராசியானவர்களாக, பிரபல்யமாக தானே இருக்கணும். உதாரணத்திற்கு நம்முடைய முதலமைச்சர் அம்மாவையே எடுத்துக் கொள்வோமே. அம்மா பிறந்த நேரத்தில் எத்தனை பேர் இந்த பூமியில் பிறந்திருப்பார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் பிறந்த அதே நேரத்தில் எத்தனை பேர் இந்த பூமியில் பிறந்திருப்பார்கள். ஆனால் அதே ஜாதக கட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் முதலமைச்சர் ஆகிவிட்டார்களா,  எல்லோரும் சூப்பர் ஸ்டார் தான் ஆகி விட்டார்களா? ஒருவரின் முன்னேற்றத்திற்கு ஜாதகம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவனுடைய கர்ம வினைகளும் முக்கியம்.

கர்ம வினைகளுக்கு ஏற்பத்தான் ஒருவனுடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் வருகின்றது. உங்களுடைய வாழ்க்கையும் இதுபோல பிரச்சனை பின் தொடர்கிறதா. ஜாதக கட்டம் நல்லாத்தான் இருக்குது. ராஜயோக ஜாதகம் தான். ஆனால் எந்த பிறவியில் செய்த கர்ம வினையோ என்னை வாழ்க்கையில் துரத்தி துரத்தி அடிக்கிறது என்பவர்கள் முருகப் பெருமானை நினைத்து தினமும் இந்த பாடல் வரிகளை படியுங்கள்.

- Advertisement -

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை நல்லபடியாக வாழுங்கள், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல். நிச்சயம் உங்கள் வாழ்க்கை நல்ல நிலைமைக்கு மாறும். தினமும் காலையில் எழுந்து முருகப்பெருமானை நினைத்து பாட வேண்டிய பாடல் வரிகள் இதோ உங்களுக்காக. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அழகாகரத்தின் 38வது பாடல் இது.

கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

- Advertisement -

இந்த பாடலை சுலபமாக படிக்க பின் சொல்லக்கூடிய இந்த வரிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

இதையும் படிக்கலாமே: செல்லும் காரியம் வெற்றி அடைய பரிகாரம்

இந்த பாடல் வரிகள் போதும். அந்த முருகப் பெருமான் உங்களுடனே இருந்து கர்ம வினைகளை குறைத்து உங்கள் வாழ்க்கையை வெற்றிக்கான பாதையில் கொண்டு செல்வார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -