செல்லும் காரியம் வெற்றி அடைய பரிகாரம்

kariya vetri
- Advertisement -

தினமும் நாம் ஏதாவது ஒரு காரியம் நல்ல விதத்தில் முடிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்புவோம். அப்படி நாம் நினைத்த காரியம் நாம் நினைத்தபடி நிறைவேறுவதற்கு என்று சில தாந்திரீக பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களை நாம் செல்லும் கிழமைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பான முறையில் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த கிழமைக்கு எந்த பரிகாரத்தை செய்தால் நாம் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கும் அந்த செயலில் ஈடுபடும் பொழுது ஏற்படக்கூடிய பயத்தை நீக்குவதற்கும் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி தெய்வ வழிபாட்டை மேற்கொண்ட பிறகு நமக்கு கூடுதல் உறுதுணையாக திகழக்கூடிய தாந்திரீக பரிகாரத்தையும் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை எந்த காரியத்திற்காக சென்றாலும் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் நம்முடைய சட்டை பயிலோ அல்லது பர்ஸ்ஸிலோ ஒரே ஒரு வெற்றிலையை எடுத்து வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். வீடு திரும்பிய பிறகு இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இப்படி எடுத்துச் செல்லும் பொழுது கண்டிப்பாக முறையில் அந்த காரியம் வெற்றி அடையும்.

இதே போல் திங்கட்கிழமை அன்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பாக நீள் வட்ட வடிவில் இருக்கக்கூடிய சிறிய கண்ணாடி ஒன்றை நிலை வாசலில் வைத்துவிட்டு நினைவாசலை கடக்கும் பொழுது அந்த கண்ணாடியில் தங்களின் முகத்தை பார்த்துவிட்டு செல்ல வேண்டும். இப்படி செல்வதன் மூலமும் அவர்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பு ஆஞ்சநேயரின் மந்திரங்களில் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் மந்திரத்தை மனதார 21 முறை கூறிவிட்டு சென்றால் அந்த காரியம் வெற்றி அடையும்.

- Advertisement -

புதன்கிழமை அன்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பாக சிறிது புதினா மற்றும் கொத்தமல்லி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு செல்வதன் மூலம் காரியங்கள் வெற்றி அடையும். வியாழக்கிழமை அன்று சீரகம் அல்லது கடுகு இவை இரண்டில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு மென்று முழுங்கி விட்டு வீட்டை விட்டு கிளம்பினால் அன்றைய தினம் காரிய வெற்றி உண்டாகும்.

வெள்ளிக்கிழமை அன்று சிறிது தயிரை சாப்பிட்டு விட்டு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். சனிக்கிழமை அன்று ஒரு சிறிய துண்டு இஞ்சியை நெய்யில் நன்றாக முக்கி அதை வாயில் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை விட்டு கிளம்புவதன் மூலம் அன்றைய தினம் வெற்றிகரமான தினமாக அமையும்.

இதையும் படிக்கலாமே: தன வரவை ஏற்படுத்தும் கால பைரவர் வழிபாடு

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்புக்குரியதாக திகழ்வது போல் ஒவ்வொரு கிழமைக்கும் நாம் செய்ய வேண்டிய காரியம் வெற்றி அடைய இந்த எளிய பரிகாரத்தை பயன்படுத்தி காரிய வெற்றியை அடையலாம்.

- Advertisement -