கடன் அடைய விநாயகர் வழிபாடு

vinayagar Dheepam
- Advertisement -

இன்று கடன் தொல்லையால் அவதி படாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் ஒரு சிலரால் வாங்கிய கடனை அடைக்கவே முடியாது. மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். என்ன தான் முயற்சி செய்தும் கடனை அடைக்க முடியாமல் ஒருவர் கடனால் துன்பப்பட்டு கொண்டே இருக்கிறார் என்றால் நிச்சயம் இதற்கு அவர்களின் கர்ம வினை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அத்தகைய கர்ம வினை நீங்கி மனிதன் கடன் இன்றி நிம்மதியாக வாழ காக்கக் கூடிய கடவுளாக விநாயகர் இருக்கிறார். அந்த விநாயகரை நாம் 11 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்யும் பொழுது நம்முடைய கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு? எப்படி செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் அடைய விநாயகர் வழிபாடு செய்யும் முறை

இந்த வழிபாடு செய்யும் 11 நாட்களும் அசைவத்தை தவிர்க்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் தீட்டு வீடுகளுக்கு செல்லக் கூடாது என்ற விதிமுறைகள் இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி 11 நாட்களும் இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் தொடங்கலாம். ஆனால் தொடங்கிய நாளிலிருந்து தவறாமல் 11 நாட்கள் செய்ய வேண்டும்.

இந்த வழிபாடு செய்வதற்கு வெள்ளெருக்கு விநாயகர் வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை விநாயகர் படம் விக்ரகம் எது இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் இந்த விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். இந்த அருகம்புல் மாவையை 11 நாட்களும் மாற்ற வேண்டும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விநாயகர் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். அடுத்து ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் நெய்வேதியமாக ஏதேனும் ஒரு எளிமையான இனிப்பை வைத்து விடுங்கள். இப்போது விநாயகர் படத்திற்கு முன்பாக எரியும் தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும் நீங்கள் அமரும் திசை கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசை பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு விநாயகர் மந்திரங்கள் என்ன தெரியுமோ அதை 108 முறை சொல்ல வேண்டும். எந்த விநாயகர் மந்திரமும் தெரியாது என்பவர்கள் ஓம் கணபதியே நமக என்ற இந்த மந்திரத்தை மட்டுமாவது 108 முறை சொல்லுங்கள். 108 முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

இந்த வழிபாடு செய்து முடித்த பிறகு நெய்வேத்தியத்தை உண்டு பூஜை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய அன்றாட பணியை தொடங்கலாம். இந்த பூஜையை தொடர்ந்து பதினோரு நாட்கள் சிரத்தையுடன் செய்து முடித்து விட்டால் உங்களுடைய தீராத கடன் பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்பு உடனே உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -