செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

pirai thanisanam
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே பல விசேஷங்களை கொண்டது. அதே போல தான் பௌர்ணமியையும் செல்வ வழிபாட்டிற்கும் தெய்வம் வழிபாட்டிற்கும் உகந்த நாள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தகைய நாளில் நம் வீட்டில் செல்வம் பெருக செய்யப்படும் ஒரு வழிபாட்டை குறித்து தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த நாளில் நம் வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தாயாரையும் குபேரையும் மனதார நினைத்து வழிபட வேண்டும். அவர்களை வழிபடுவதோடு மூன்றாம் பிறை தரிசனத்தையும் ஒரு சேரக் கண்டு நம்முடைய செல்வ வளம் பெருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்தப் பிரார்த்தனை எப்படி செய்வது என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் தன தானியங்கள் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

இன்றைய தினத்தில் மாலை இந்த வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமை என்றாலே குபேரருக்கும் குரு பகவானுக்கும் உகந்த நாள். ஆகையால் இந்த சந்திர வழிபாட்டோடு இவர்களையும் சேர்த்து வணங்கும் போது இன்னும் அதிகமான பலனை பெறலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு முன் காலையில் குளித்து இருந்தாலும் மீண்டும் ஒரு முறை குளித்து விடுங்கள். இந்த வழிபாடு துவங்குவதற்கு முன்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு மகாலட்சுமி தாயாரையும் குபேரையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு உங்கள் வீட்டில் எச்சில் படாத தட்டு அல்லது தாம்பாள தட்டு இரண்டில் ஏதாவது ஒன்று எடுத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறமும் மஞ்சள் குரு பகவானுக்கு உகந்தது. அதே போல் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை இந்த மஞ்சள் மேல் வைத்து வாசனை மிக்க மலரை இந்த தட்டில் வைத்துக் அலங்கரித்து கொள்ளுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயமானது குபேருக்குரியது. வாசனை மிக்க மலர்கள் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது.

இப்போது இந்த தட்டை கையில் எடுத்துக்ஸகொண்டு சந்திர தரிசனத்தை பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் சந்திரன் தெரியா விட்டாலும் பரவாயில்லை அந்த திசையை நோக்கி இந்த தட்டு கையில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும், பணப்பிரச்சினை தீர வேண்டும் தன, தானியங்கள் பெருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ என்று இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். கார்த்திகை மாதம் பௌர்ணமியும், ஈஸ்வரருக்கும் உகந்த நாள் என்பதால் இந்த மந்திரத்தை சொல்வது பல விசேஷங்களை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். அதன் பிறகு இந்த தாம்பாள கேட்டை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தட்டில் இருக்கும் ஐந்து ரூபாயை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

இந்த மஞ்சளை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்து சமையலறை மேடை, சுவர் என ஏதாவது ஒரு இடத்தில் அட்சயம என்ற வார்த்தை எழுத வேண்டும். அதன் பின் கொஞ்சம் மலர்களை வைத்து வீட்டில் தன தானியங்கள் எப்பொழுதும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு எப்போதும் போல் உங்கள் வேலைகளை தொடரலாம்.

இதையும் படிக்காலமே: குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்

இந்த வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் செல்வங்கள் வளம் மட்டுமின்றி சகல சம்பத்தும் பெருகி நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -