கர்ம வினை நீங்கி வளமான வாழ்க்கையைப் பெற மிளகு பரிகாரம்.

- Advertisement -

தீதும் நன்று பிறர் தர வரா. என்ற இந்த புறநானூற்றுப் பாடலின் வரிகளை அறியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இதன் பொருள் ஆனது, நன்மையும் தீமையும் பிறரால் நமக்கு வருவது அன்று. ஒருவன் பிறருக்கு நன்மை செய்யும் போது அதன் பலன் அவனுக்கு இரட்டிப்பாக கிடைக்கும். அதே போல் தான் அவன் செய்யும் தீமைகளுக்கான பலனும் அவனுக்கு இரட்டை மடங்காக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமக்கு நடக்கும் நன்மைகள் தீமைகள் அனைத்துமே இந்த கர்மாவின் பலன்கள் தான். கர்மா என்பதற்கு, வினை என்றொரு பொருளும் உண்டு. கர்மா என்பது நமக்கு எழுதப்பட்ட விதி கிடையாது. இது நமக்கு நாமே எழுதிக் கொள்ளும் விதி. விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பது தான் நியதி. ஆனால் ஒரு சில எளிய பரிகாரங்கள் மூலம் இதனால் ஏற்படும் தாக்கத்தின் வீரியத்தை குறைக்கலாம், என்று நம் முன்னோர்கள் இதற்காக சில வழிமுறைகளை நமக்கு கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

கர்ம வினையினால் பாதிக்கப்பட்வர்களுக்கும், அவரின் சந்ததியினருக்கும் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். கர்ம வினை என்பது தங்களுடன் முடிந்து விடுவதில்லை. தன் அடுத்தடுத்த சந்தியினருக்கும் தொடரும்.

கர்ம வினை தீர்க்கும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு எளிய பொருள் என்றால் அது வேறொன்றும் இல்லை. நம் சமையல் அறையில் இருக்கும் மிளகு தான். மிளகில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருப்பதோடு, மட்டுமல்லாமல் இது போன்ற தாந்திரீக விஷயத்தில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்த கர்ம வினைகளின் ஆற்றலை குறைக்கவும், இந்த மிளகு பயன்படுகிறது. பரிகாரத்திற்கு நீங்கள் கடைக்கு சென்று புதிதாக வாங்கிய மிளகை தான் பயன்படுத்த வேண்டும். இதை நீங்கள் இரவு படுக்க செல்லும் போது செய்யதால் நல்லது.

- Advertisement -

முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள், பின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு மிளகை போட்டு ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு இந்த மிளகு முடிச்சை உங்கள் உச்சந்தலை மீது வைத்து, நான் செய்த கர்ம வினைகளின் தீமைகளில் இருந்து என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று, சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு வேண்டி ‘சிவசிவ’ என்ற நாமத்தை உச்சரித்து நீங்கள் படுக்கும் போது இந்த மிளகு முடிச்சை உங்கள் தலையணை அடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோல தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து வரவேண்டும். இந்த ஐந்து நாட்களுக்கும் அந்த ஒரே மிளகு முடிச்சை பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து, மறுநாள் நீங்கள் எழும் போதும் நீங்களே அதை யார் கையிலும் படாதவாறு எடுத்து ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் தூங்கும் போதும் அதை மிளகு முடிச்சை எடுத்துக் கொண்டு இதைப் போன்ற மந்திரத்தை சொல்லி, வேண்டுதலையும் வைத்து பின் தலையணை அடிகள் வைத்து உறங்க செல்லுங்கள். இதே போல் ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்த பின் ஆறாவது நாள் இந்த முடிச்சை யாரும் கால் படாத இடமாக பார்த்து போட்டு விடுவது நல்லது. இதில் முக்கியமான விஷயம் யாரும் கால் படாத இடமாக இருக்க வேண்டும்.

ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்து அவர்களே கொண்டுபோய் இது போன்ற இடங்களில் போட்டு விடுவார்கள். பெண்களும் இதே போன்ற பரிகாரங்களை செய்து கொள்ளலாம். ஆனால் வெளியில் சென்று கால் படாத இடத்திற்கு போடுவதற்கு, ஆண்களுடன் பெண்கள் செல்லலாமே ஒழிய அந்த பரிகார முடிச்சை பெண்கள் செய்திருந்தால், அவர்கள் தான் தன் கையில் போட வேண்டும். அடுத்தவரின் கையால் அது தொடக்கூடாது. இத்துடன் உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு உதவியோ, கோவில்களுக்கு தான, தர்மங்கள், மற்றும் எளிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு படிப்பு செலவு போன்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற தங்களால் இயன்ற ஏதாவது ஒரு தானத்தை செய்து கொண்டு, இறைவனை மனதார வேண்டிக் கொண்டும் வந்தால் இந்த கர்ம வினையில் இருந்து நாம் ஓரளவு நம்மையும் நம் சந்ததியிரையும் காப்பாற்ற முடியும்.

- Advertisement -