வாழ்க்கையில் இருக்கும் பலவகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரும் 1 கற்பூரம். உங்கள் தலையெழுத்தையே மாற்றி எழுதக்கூடிய சக்திவாய்ந்த கற்பூர பரிகாரங்கள்.

sudam
- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு சில சமயங்களில் ஏதோ ஒரு வகையில் சிறிய வழி கிடைக்கும். பல ஆயிரம் செலவு செய்தும் தீர்த்து வைக்கப்பட முடியாத சில உடல் ரீதியான உபாதைகளை கூட, வெறும் பத்து ரூபாய் செலவில் கை வைத்தியத்தின் மூலம் சரி செய்து இருப்போம். எந்த பணம் காசும் செலவு இல்லாமல், வெறும் கற்பூரத்தை வைத்து செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரத்தை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பின் சொல்லக்கூடிய பரிகாரங்களை நீங்கள் செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் கூடிய விரைவிலேயே தீர்ந்துவிடும். நம்பிக்கையோடு செய்து பார்க்க வேண்டிய சுலபமான தாந்த்ரீக பரிகாரங்கள் உங்களுக்காக.

sudam

உங்களுடைய வீட்டில் வாஸ்துவினால் பிரச்சனைகள். வீட்டில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கின்றது. வீட்டில் எதிர்மறை ஆற்றலின் மூலம் ஏதாவது பிரச்சினை எனும் பட்சத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் கட்டி கற்பூரத்தைப் போட்டு அப்படியே திறந்தது போலவே வைத்துவிட வேண்டும். அந்த கற்பூரம் காற்றில் கலந்து, கரையக்கரைய உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகள் கரைந்து போகும்.

- Advertisement -

மந்திரங்களை உச்சரிக்கும் போது, தியானம் செய்யும்போது, ஒரு கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்துவிட்டு அதன் பின்பு ஆன்மீக ரீதியான தியானங்கள் மந்திரங்களை உச்சரித்தால் அது உடனே பலிதமாகும்.

sudam1

என்னடா வாழ்க்கை இது. நிம்மதியே இல்லை. எதைத் தொட்டாலும் தோல்வி, பிரச்சனைகள், வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு சிறிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த நெய்யில் ஒரு கட்டி கற்பூரத்தைப் போட்டு ஊறவைக்கவேண்டும். 3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் ஊற வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

இந்த கற்பூரத்தை நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுடைய நடு ஹாலில் வைத்து ஏற்றி விட்டு, அது முழுமையாக எரிந்து அணைந்தவுடன் தூங்கச் செல்லுங்கள். இப்படி செய்தால் உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய மனபாரம் குறைந்து, மனநிம்மதி பெற்று, வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தெரியும். தினம்தோறும் இப்படி செய்து கொள்ளலாம்.

arali

வீட்டில் ஒரே பண கஷ்டம். கடன் தொல்லை. வருமானத்திற்கு வழி இல்லை. ஒரு சிறிய தட்டில் கட்டி கற்பூரம் வைத்து ஏற்றி விடுங்கள். அந்த கற்பூரம் எரியக்கூடிய நெருப்பில் சிவப்பு நிற ரோஜா பூக்களை போட்டு எரித்து விடவேண்டும். சிவப்பு நிற அரளிப்பூ கிடைத்தாலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். பூஜை அறையிலேயே இப்படி செய்து துர்க்கை அம்மன், அங்காளம்மன் போன்ற உக்கிர தெய்வங்களை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி அழிக்கப் பட்டு, வீட்டில் பண வரவு அதிகரிக்கும். வறுமை நீங்கும். இதைச் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுடைய வீட்டில் செய்யலாம்.

chandika-devi-amman1

உங்களுக்கு உடல்நிலை சரியில்லை. கண் திருஷ்டியின் மூலம் உடல் உபாதைகள். எதிர்மறை ஆற்றலின் மூலம் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டே வருகிறது. இதை சரி செய்ய என்ன செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ச்சி, அதில் கற்பூரத்தைப் போட்டு லேசாக சூடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த கற்பூரம் கலந்த நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்து வந்தால் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடும்.

sudam

மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லா பரிகாரத்திற்கு மெழுகு கற்பூரத்தை பயன்படுத்தக்கூடாது. கட்டி கற்பூரத்தை தான் பயன்படுத்த வேண்டும். தாந்திரீகத்தில் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பயன் பெறலாம். நம்பிக்கை இல்லாமல் தாந்த்ரீக பரிகாரங்கள் செய்தால் பலன் தராது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -