கருவண்டு உள்நுழையும் வீட்டிற்குள் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தமாகுமா? அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது?

vandu
- Advertisement -

இன்றைய நவீன உலகிலும் செய்வினை பேய் பில்லி சூனியம் என்ற வார்த்தைகளை பெரும்பாலானோர் நம்பிக்கையுடன் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் அறிவியல் விதிப்படியும் இவை உண்மையாகின்றன. இவ்வாறு பார்த்தால் உலகில் நன்மை என்று ஒன்று இருக்கும் பொழுது தீமை என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான தீமைகள் என்னென்ன என்பதையும் அதனை எவ்வாறு உணர்வது என்பதனையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

vandu1

நேர்மறை ஆற்றல் ஆன நல்ல சக்தியையே கடவுள் தெய்வம் என்கின்றோம் எதிர்மறை ஆற்றல் ஆன தீயசக்தியை சாத்தான் பேய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் என்று சொல்கின்றோம் இறைவனை எவ்வாறு கண்களினால் பார்க்க முடியாதோ அதேபோல் தீய சக்தியையும் கண்களால் பார்க்க முடியாது ஆனால் அவற்றையும் உணர முடியும் அதனை உணர்ந்து அவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்து வர அவற்றிலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -

செய்வினை:
செய்வினை என்பது தீயசக்திகளை குவியலாக ஒன்று திரட்டி அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவ செய்வதேயாகும். அவ்வாறான தீயசக்தி அந்த நபருக்கு அடுத்தடுத்து கெடுதல்களையே கொடுத்துக் கொண்டு வரும். இதுவரை நன்றாக இருந்த உங்கள் வாழ்க்கையில் திடீரென பலவிதமான வினோதங்கள் நடக்க ஆரம்பிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் இவ்வாறு செய்வினையால் பாதிக்கப்பட்டதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

lemon

செய்வினை அறிகுறிகள்:
உங்கள் வீட்டினை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் வீட்டில் திடீரென துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும் அது உங்களால் உணரக்கூடியதாக இருக்கும். நீங்கள் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றும் பொழுது நன்றாக எண்ணெய் ஊற்றி திரிபோட்டு இயற்றினாலும் அவை மீண்டும் மீண்டும் அணிந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

அதிலும் முக்கியமாக குளவி உங்கள் வீட்டிற்குள் அதாவது கருவண்டு நுழைவதால் உங்களுக்கு செய்வினை உள்ளதை அறிந்து கொள்ள முடியும். அவை தீய சக்திகள் உங்கள் வீட்டினுள் இருப்பதை உணர்த்துவதற்காகவே வருகின்றன.

kulavi

வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு வந்து கொண்டே இருக்கும் பால் காய்ச்சும் பொழுது தொடர்ச்சியாக பால் திரிந்து கொண்டே இருந்தாலும் செய்வினை உள்ளதாக அர்த்தம் ஆகும். நீங்கள் வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சொந்த தொழில் செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு அவற்றில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு திடீரென விபத்துக்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

- Advertisement -

dhupam

இவை அனைத்தும் ஏதேனும் ஒன்று எப்பொழுதாவது எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் இங்கே உள்ள அனைத்தும் ஒன்று சேர ஒரு வீட்டில் நடந்து கொண்டே இருந்தால் அங்கு நிச்சயம் செய்வினை உள்ளதாக தெரிந்துகொள்ளலாம்.

dhupam

செய் வினை தீர பரிகாரங்கள்:
இவ்வாறு தீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்ந்தீர்கள் என்றால் வீட்டில் தினமும் வெண்கடுகு குங்கிலியம் தசாங்கம் தேவதரு மரப்பட்டை இவற்றை சேர்த்து தூபம் போட்டு வர தீய சக்திகளை வீட்டில் இருந்து அகற்ற முடியும் நல்ல நறுமணம் நிறைந்த இடத்தில் தீய சக்திகள் இருப்பது என்பது கடினமான ஒன்றாகும்.

venkadugu

வீட்டில் குலதெய்வ வழிபாட்டினை தொடர்ந்து பின்பற்றி வர வீட்டில் உள்ள தீய சக்திகளை அடியோடு விரட்ட முடியும். தினமும் காலை மாலை விளக்கேற்றி ஸ்லோகம் அல்லது கடவுளின் மந்திரங்களை உச்சரித்து வந்தோம் என்றால் வீட்டில் உண்டாகும் நேர்மறை ஆற்றல் இன் சக்தியால தீயசக்திகள் வெளியேறிவிடும்.

- Advertisement -