2 வெள்ளை முடி எட்டிப் பார்க்கும்போதே ஹேர் டை தேடி ஓடாதீங்க. பிறகு சீக்கிரம் மொத்த முடியும் வெள்ளையாகிவிடும். எட்டிப் பார்த்த வெள்ளை முடியை கருப்பாக்க இந்த எண்ணெயை தடவினாலே போதும்.

hair
- Advertisement -

டீனேஜை தொடும்போதே சில பேருக்கு வெள்ளை முடி எட்டிப் பார்க்கத் தொடங்கும். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள். அச்சச்சோ இவ்வளவு சின்ன வயதிலேயே வெள்ளை முடி வந்து விட்டது. இதை மறைத்தாக வேண்டும் என்று ஹேர் டை, ஹேர் கலர் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இப்படி செய்தால் மொத்தமுடிக்கும் ஆபத்து. சிறிய வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கும்.

உங்களுடைய உணவுப் பழக்க வழக்க முறைகளில் சில பிரச்சினைகள் இருக்கும். முதலில் அதை கவனித்து சரி செய்து கொள்ளுங்கள். அதேப்போல உங்களுடைய பரம்பரைக்கே இப்படி சிறு வயதிலேயே வெள்ளை முடி வரக்கூடிய பிரச்சனை இருந்தால், உங்களுடைய இளநரையை தடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். உங்களுடைய அப்பா தாத்தா அல்லது அம்மா பாட்டி போன்ற சொந்தங்களில் யார்கேனும் இப்படிப்பட்ட பிரச்சனை பரம்பரையாக இருக்கிறதா என்பதையும் சற்று திரும்பிப் பாருங்கள்.

- Advertisement -

பிரச்சனை என்னவென்று சரியாக தெரிந்துகொண்டு அதன் பின்பு வெள்ளை முடியை கருப்பாக்கக்கூடிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சிறுவயதிலேயே உங்களுக்கு வெள்ளை முடி வர தொடங்கி விட்டது, முழுமையாக எல்லாம் முடியையும் வெள்ளையாக மாற்றாமல் தடுக்க, இருக்கின்ற இளநரையை படிப்படியாக குறைக்கவும் இந்த எண்ணெயை பயன்படுத்தி பார்க்கலாம்.

இந்த எண்ணெய் தயார் செய்ய இரண்டு கைப்பிடி அளவு வெள்ளை கரிசலாங்கண்ணி இலை, இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை, கொட்டைகள் நீக்கிய ஐந்து நெல்லிக்காய் தேவை. இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே அரைத்தால் கொரகொரப்பாக இது விழுது போல அரைபட்டு நமக்கு கிடைக்கும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 500ml மரச்செக்கு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய விட வேண்டும். விழுதில் இருக்கக்கூடிய சத்துக்கள் எல்லாமே அந்த எண்ணெயில் இறங்கி எண்ணெய் கருப்பு நிறத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய் அப்படியே நன்றாக சூடு ஆறட்டும். 5 மணி நேரம் டிஸ்டப் பண்ணாதீங்க.

பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியிலோ அல்லது வடிகட்டியிலோ ஊற்றி இதை நன்றாக பிழிந்து எடுத்தால் கருப்பு நிறத்தில் திக்கான ஒரு எண்ணெய் கிடைத்திருக்கும். இதை உங்களுடைய தலையில் தொடர்ந்து தடவி வர இளநரை படிப்படியாக கருப்பாக மாறும். மீண்டும் இளநீரை வேகமாக வருவதை தடுத்து நிறுத்தும். 50 வயதை கடந்தவர்களுக்கு இளநரை தலை முழுவதும் வந்துவிட்டது என்றால் அதை மாற்றுவது கொஞ்சம் சிரமம் தான்.

ஆனால் சின்ன வயதிலேயே இளநரை பிரச்சனை எதிர்கொள்பவர்கள் இந்த எண்ணெயை தொடர்ந்து தடவி வரும்போது நிச்சயமாக உங்களுடைய தலைமுடி கருப்பாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. மூன்று மாதம் தொடர்ந்து எண்ணெய் தடவி வரும்போது மாற்றத்தை பார்க்க முடியும்.

காய்ச்சிய இந்த எண்ணெய் ஒரு மாதத்திற்கு நன்றாக இருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எப்படி பயன்படுத்தலாம். தினமும் நீங்கள் தலைக்கு எண்ணெய் வைப்பவர் ஆக இருந்தால் தேங்காய் எண்ணெய்க்கு பதில் இந்த எண்ணெயை தலையில் வைத்துக் கொள்ளலாம். ரொம்பவும் திக்காக பிசுபிசுப்பாக உள்ளது என்றால் வாரத்தில் இரண்டு நாள் இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு 3 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக இளநரை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -