கரும்புள்ளிகள் மறைய அழகு குறிப்பு

potato ice cube
- Advertisement -

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருப்பார்கள். ஆனால் ஒருவருடைய அழகை கெடுக்கக்கூடிய விஷயமாக திகழ்வது பருக்கள். பருக்கள் மட்டுமல்லாமல் பருக்களால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளும் தான். ஒரு முகத்தை பார்த்தவுடனே நமக்கு அவர்களின் முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும் கரும்புள்ளிகளுமே முதலில் தெரியும் என்பதால் அந்த கரும்புள்ளிகளால் ஒருவருடைய அழகு கெடும் சூழ்நிலையில் இருக்கும் பொழுது அந்த அழகை மறுபடியும் கொண்டு வரவும் கரும்புள்ளிகளை நீக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான முறையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பருக்களும் ஒரு வகையில் அழகு என்றுதான் கவிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு என்று ஆங்காங்கே வரும்பொழுது அந்த பருக்களும் அழகாக தான் திகழும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் உற்பத்தியாக கூடிய ஹார்மோன்களின் பிரச்சனையால் அதிக அளவில் பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். அப்படி அதிக அளவில் பருக்கள் ஏற்பட்டாலும் அல்லது ஒரு பருவே பெரியதாக கட்டிப் போல வந்தாலும் அதனால் அவர்களுடைய அழகு என்பது குறைந்துவிடும்.

- Advertisement -

இந்த பருக்கள் வந்த இடம் தெரியாமல் அப்படியே போய்விட்டாலும் வந்தது இருந்தது போய்விட்டது என்று விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு அந்த பருக்கள் வந்த இடத்தில் கரும்புள்ளிகளும், பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் இருந்து முகத்தின் அழகை நிரந்தரமாகவே கெடுத்து விடும். இப்படி கரும்புள்ளிகளால் அழகை இழந்தவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான அழகு குறிப்பு.

இதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு. ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்துவிட்டு அதன் தோலை நன்றாக சீவி விட்டு உருளைக்கிழங்கை உரசி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் மாதுளம் பழம். பாதி மாதுளம் பழத்தை எடுத்து அதன் முத்துக்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இதனுடன் அரை எலுமிச்சம் பழ சாறையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைத்து குறைந்தது 5 மணி நேரமாவது ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். இப்பொழுது ஐஸ் கட்டி தயாராகிவிட்டது. ஒரு நாளைக்கு மூன்று வேளை என்ற வீதம் ஒரு ஐஸ்கட்டியை எடுத்து முகம் முழுவதும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் இருக்கும் இடத்தில் அதிகமான அளவு மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும் மறைய ஆரம்பிக்கும். பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளும் நீங்கும். இந்த முறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலே மிக நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும். இந்த ஐஸ்கட்டி மசாஜை செய்வதற்கு முன்பாக முகத்தில் எந்தவித க்ரீம்களும் மேக்கப்பும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடியின் ஆரோக்கியத்தை காக்கும் கடுகு எண்ணெய்

கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்தாமல் இப்படி இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தி நம்முடைய அழகை என்றென்றும் பேணி பாதுகாத்துக் கொள்வோம்.

- Advertisement -