மூன்றே நாட்களில் உங்களுடைய வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இதோ ஒரு சூப்பரான ஐடியா. தொடர்ந்து இதை செய்து வந்தால் நிரந்தரமாக வெள்ளை முடி எல்லாம் கருப்பாக மாறிடும்.

- Advertisement -

எல்லா முடியும் நரைத்துக் கொட்டுவதற்குள் எப்படியாவது தலைமுடியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்காக. முடி உதிர்வை நிறுத்தி கருகருவென அடர்த்தியான முடி வளர்ச்சியை பெறவும், நிரந்தரமாக வெள்ளை முடிகளை கருப்பு முடிகளாக மாற்றவும், இன்று ஒரு இயற்கையான வழிமுறையை தான் பார்க்கப் போகின்றோம். இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா மூன்று மாதத்திற்குள் ஒரு ரிசல்ட் தெரியும். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டன்டாக உங்களுடைய நரைமுடியை மூன்றே நாட்களில் பக்கவிளைவுகள் இல்லாமல் கருப்பாக மாற்றுவும் ஒரு ஐடியா இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த அழகு குறிப்பு என்ன என்று தெரிந்து கொள்வோம்.

முடி வளர்ச்சி தரும் கரும்பூலான் செடி:
இந்தச் செடியின் பெயர் வேண்டும் என்றால் நமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், நாம் எல்லோருமே இந்த செடியை பார்த்திருப்போம். நீரோட்டம் உள்ள இடங்களில் எல்லாம் இந்த செடி சுலபமாக தானாக வளர்ந்து விடும். கரும்பூலான் செடியின் பழம் கருப்பு நிறத்தில் இருக்கும். அதை எடுத்து நசுக்கினால் அதிலிருந்து நீல நிற இங்க்கு போல ஒரு பசை வெளியாகும். சிறு வயதில் இதை நாம் பள்ளிக்கூட பருவத்தில் பார்த்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இந்த செடி தெரியுமா என்று ஒரு முறை நினைவு கூர்த்து பாருங்கள். இந்த கரும்பூலா செடியை வைத்து தான் முடி வளர்ச்சிக்கு குறிப்புகளை பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

கரும்பூலா பழங்களை எடுத்து உங்கள் கைகளால் நசுக்கி அதிலிருந்து வெளிவரக்கூடிய சாயத்தை அப்படியே வெள்ளை நிற முடியின் மேல் தடவி 1/2 மணி நேரம் விட்டு விடுங்கள். பிறகு வெறும் தண்ணீரில் தலைக்கு குளித்தால் உங்களுடைய நரைமுடி கருப்பாக மாறி இருக்கும். நரைமுடி வெளியே தெரியாமல் இருக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து இதை செய்து வாருங்கள். (இதை வெள்ளை தாடிகள் மேலும் பூசலாம்.) ஆனால் திரும்பவும் ஷாம்பு போட்டு குளித்தால் உங்களுடைய வெள்ளை முடி வெளியே தெரியத்தான் செய்யும். இன்ஸ்டன்டாக அடுத்த வாரம் நரைமுடி கருப்பாக தெரிய வேண்டும். ஏதோ ஒரு ஃபங்ஷனுக்கு போக வேண்டும் என்றால், தேவைப்படும்போது இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுவே உங்களுடைய தலை முடி நிரந்தரமாக கருப்பாக இருக்க வேண்டும். அடர்த்தியாக கருகருவென காடு போல வளர வேண்டும் என்றால், இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். 1 லிட்டர் அளவு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே இருக்கட்டும். 1 கைப்பிடி கரிசலாங்கண்ணி இலை, 1 கைப்பிடி அவுரி இலை, 1 கைப்பிடி கரும்பூலா இலை, 1 கைப்பிடி மருதாணி இலை, (ஒரு கைப்பிடி கரும்பூலா காய்களை காய வைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்) இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைக்கவும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை அதில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடு செய்யுங்கள். நாம் சேர்த்திருக்க கூடிய பொருட்கள் எல்லாம் பச்சையாக இருக்கும் அல்லவா. அது எல்லாம் எண்ணெயில் காய்ந்து சிடசிடப்பு அடங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி இந்த எண்ணெயை மட்டும் தலைக்கு தேய்த்து வந்தாலே உங்களுடைய இளநரை பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும்.

இதையும் படிக்கலாமே: 30 வயதை கடந்த பிறகும் கூட முடிவில்லா முடி வளர்ச்சியை பெற, பவர்ஃபுல்லான இந்த ஹேர் சீரம் ஒன்றே போதும். முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் கூட கடகடவென மீண்டும் முடியை வளர செய்து விடலாம்.

முடி கருகருவென காடு போல வளர தொடங்கி விடும். எளிமையான குறிப்பு தான் இது. இந்த இலைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வையுங்கள். அவர்கள் கொண்டுவந்து‌ கொடுப்பார்கள். அதற்கு உண்டான காசு கொடுத்து வாங்கிக் கொள்ளவும். இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய எண்ணெய் என்பதால் பக்க விளைவுகள் வருவதற்கும் வாய்ப்பு கிடையாது. மூன்றே மாதத்தில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -