முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் வேருடன் நீங்க எளிதான டிப்ஸ்! தூங்கும் முன்பு இதை செய்துவிட்டு தூங்கினால் முகத்தில் புள்ளிகள் எதுவும் இல்லாமல் பளபளன்னு எப்போதுமே இருக்கும்.

mint-leaves-blackheads-face
- Advertisement -

முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு நிறையவே காரணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை சோப் அல்லது இயற்கை பொருட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும், ஆனால் இப்படி செய்யாமல் இருந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கும்.

அது போல ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் ஆவது பருக வேண்டும். இல்லை என்றால் உள்ளுக்குள் இருக்கும் கழிவுகள் வெளியேற முடியாமல், முகத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்கள் வழியே வெளியேற்றப்படும். இதனால் முகப்பருக்கள் தோன்றும், பாக்டீரியாக்கள் தொந்தரவும் வரக்கூடும். வெண்புள்ளி, கரும்புள்ளிகளும் தோன்றும். எனவே இத்தகைய பிரச்சினைகளை சரி செய்து முகத்தில் இருக்கும் புள்ளிகளை விரட்டி அடித்து முகத்தை பளபளன்னு ஜொலிக்க செய்ய எளிய அழகு குறிப்பு தகவலைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் பொதுவாக வேருடன் தோன்றக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் அதை கிள்ளி விடக்கூடாது. ஆழ்ந்த புள்ளிகள் வேருடன் கிள்ளுவதால் ஒரு விதமான திரவம் கசியும். இந்த திரவம் எல்லா இடங்களிலும் பரவினால் முகப்பருக்கள் தோன்றும். எல்லா இடங்களிலும் கரும்புள்ளிகள் வரவும் வாய்ப்புகள் உண்டு, எனவே இதை கிள்ளி விடாமல் எளிதாக எப்படி சரி செய்வது?

முதலில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீருக்கு குறையாமல் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். இது சரும ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நன்மைகளை கொடுக்கக் கூடியது. மேலும் உடல் உஷ்ணத்தை தணித்து எப்பொழுதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவும். உடலில் இருக்கும் கழிவுகளையும் எளிதாக வெளியேற்றும்.

- Advertisement -

தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் ஊற்றிக் கொள்ளுங்கள். காய்ச்சிய பால், காய்ச்சாத பால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை! பாக்கெட் பால் கூட பயன்படுத்தலாம். இதனுடன் சம அளவிற்கு புதினா சாறு சேர்க்க வேண்டும். புதினா இலைகளை கசக்கி கிடைக்கும் சாறை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை முகத்தில் பஞ்சு கொண்டு எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவிக் கொள்ளுங்கள். அப்படியே கை வைக்காமல் உலர விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் தூங்கி விடலாம். காலையில் எழுந்ததும் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
செம்பட்டை முடி, நரைமுடி ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் கருப்பாக மாற ரொம்பவே ஈசியாக என்ன செய்யலாம்? கருகரு கார்கூந்தலுக்கு செலவில்லாத டிப்ஸ்!

இது போல தொடர்ந்து நீங்கள் தினமும் செய்து வந்தால் ரெண்டே வாரத்தில் உங்களுடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பருக்கள், மேடு பள்ளங்கள், தழும்புகள் எதுவாக இருந்தாலும் அவை மறைய ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல இவை மறைந்து உங்களுடைய முகத்தில் இருக்கும் துவாரங்கள் இறுகும். இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பால் மற்றும் புதினா சாறுக்கு உண்டு. இதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் கழிவுகள் நீங்கி, இயற்கையான முறையில் நம்முடைய முகத்திற்கு ஒரு புத்துணர்வை கொடுத்து, எப்பொழுதுமே பளபளன்னு இளமையாக மின்ன செய்யும்.

- Advertisement -