செம்பட்டை முடி, நரைமுடி ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் கருப்பாக மாற ரொம்பவே ஈசியாக என்ன செய்யலாம்? கருகரு கார்கூந்தலுக்கு செலவில்லாத டிப்ஸ்!

hair-color-oil
- Advertisement -

எல்லோருக்குமே கரு கரு என்று நல்ல அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும், ஆனால் சிலருடைய முடியை பார்த்தால் செம்பட்டையான நிறத்தில் காணப்படும். இது சிலருக்கு அழகிய தோற்றத்தை கொடுத்தாலும், பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும். அது மட்டும் அல்லாமல் நரைமுடி பிரச்சனையும் பலருக்கு இருந்து வருகிறது. இத்தகைய பிரச்சினைகளை ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் ரொம்பவே ஈசியாக நீக்கக் கூடிய ஒரு எளிய அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்களுடைய அழகிய தலை முடியை நல்ல ஒரு கருமையான நிறத்திற்கு கொண்டு வர செயற்கை முறையை மட்டும் நாட வேண்டாம். பல செயற்கை நிறமிகளில் அம்மோனியா கலக்கப்படுகிறது. இது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவே நரைமுடியை கருப்பாக்குகிறேன் என்கிற பெயரில் செயற்கையை நாடிச் சென்று உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது சரும நோய்களையும் ஏற்படுத்துகிறது என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

சரி, இயற்கையாக எப்படி இதை சரி செய்வது? என்று இனி பார்ப்போம். முதலில் ஒரு 100ml அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஏதாவது ஒரு பிராண்டட் காபி பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அதே போல ஒரு ஸ்பூன் அளவிற்கு டீ தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேயிலை மற்றும் காபி இரண்டுமே நல்ல ஒரு நிறத்தை இயற்கையாக கொடுக்கக் கூடிய தன்மை கொண்டுள்ளது. மேலும் பக்க விளைவுகளும் அற்றது என்பதால் தாராளமாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெயுடன் இவற்றை நன்கு கலந்து விட்ட பின்பு ஏழு சொட்டுகள் அளவிற்கு எலுமிச்சை சாற்றை சேருங்கள். இது எண்ணெயில் அப்சர்வ் செய்வதற்கு உதவும்.

- Advertisement -

பிறகு அப்படியே இரண்டு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் டபுள் பாய்லிங் செய்து இந்த தேங்காய் எண்ணெயை மிதமான சூடேற்ற வேண்டும். இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தினுள் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது மேலே ஒரு சுத்தமான பாத்திரம் வைத்து அதில் நீங்கள் ஊற வைத்துள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது எண்ணெய் மிதமான சூடேறும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் அடுப்பை அணைத்து முற்றிலுமாக ஆற விட்டு விடுங்கள். தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் சுத்தமான ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த முத்துக்கள் இருந்தால் போதும் , முகத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகள் மறைந்து களங்கமில்லா நிலவை போன்ற பிரகாசமான அழகை பெறலாம்.

அவ்வளவுதான், இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தலை முழுவதும் தடவி பத்து நிமிடம் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரணமான ஷாம்புவால் நீங்கள் தலைக்கு அலசி விடுங்கள். அவ்வளவுதான், உங்களுடைய முடி வெள்ளை முடி, செம்பட்டை முடி, நரைமுடி என்று எப்படி இருந்தாலும் அது கருகருன்னு நல்ல ஒரு ஆரோக்கியமான நிறத்திற்கு மாறிவிடும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது முற்றிலுமாக உங்களுடைய பிரச்சனை தீர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இயற்கையான முறையில் இவை கையாளப்படுவதால் தைரியமாகவும் செய்யலாம்.

- Advertisement -