உங்கள் வீட்டில் இறைசக்தி அதிகரித்துக்கொண்டே இருக்க, பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருள்.

poojai-room
- Advertisement -

தீய சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்க, கண் திருஷ்டியால் நமக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க, வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்காமல் இருக்க, காரிய தடைகள் விலக, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, இறை சக்தியை அதிகரிக்க, நாம் செய்ய வேண்டியது என்ன. நம்மை எப்போதுமே பாசிட்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். நெகட்டிவ் எனர்ஜியை நம் பக்கம் வரவிடவே கூடாது. இப்படி நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய நிறைய பொருட்கள் ஆன்மீக ரீதியாக நமக்கு சொல்லப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karungali-kattai1

கருங்காலி கட்டை. கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருள் நம் வீட்டில் இருந்தாலும் அது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும். இறை சக்தியை தன்னுள் ஈர்க்கக் கூடிய சக்தி இந்த கருங்காலிக் கட்டைக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. கருங்காலியை எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இப்போது கருங்காலியில் செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாகவே சுலபமாக கிடைக்கின்றது. கருங்காலியால் செய்யப்பட்ட பிரம்பு, சூலம், வேல், கருங்காலி மணி, இதில் உங்களுக்கு எந்த பொருளை வாங்கினால் சவுகரியமாக இருக்குமோ அதை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, அதற்கு ஒரு சந்தன குங்கும பொட்டு இட்டு வழிபாடு செய்து வந்தாலே போதும். வீட்டில் இறைசக்தி, ஐஸ்வர்ய கடாட்சமும் நிறைவாக இருக்கும். வீட்டில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது என்று சொல்லப்பட்டுள்ளது.

karungali-kattai

கருங்காலியானால் செய்யப்பட்ட மணி உங்களுக்கு கிடைத்தால் அதை வாங்கி நீங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். கருங்காலியில் சிறிய தாயத்து போல கூட கிடைக்கின்றது. முடிந்தால் அதை வாங்கி கூட கழுத்தில் போக்கிக் கொள்ளலாம். இதை கழுத்தில் அணிந்து கொள்வதன் மூலம் நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல் நிறைவாக இருக்கும். எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நம்மை நெருங்க முடியாது. எந்த ஒரு கண் திருஷ்டியின் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படாது. முக்கியமாக நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பாக கோவில்களில் கருவறைக்கு மேலே, கோபுரத்திற்கு மேலே, தங்கத்தில், செம்பில் கலசம் வைத்து இருப்பார்கள். அந்த கலசத்துக்கு உள்ளே இந்த கருங்காலிக் கட்டையை வைத்திருப்பார்கள். காரணம் பூமியை தாக்க கூடிய இடி மின்னலை கூட தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இந்த கருங்காலிக் கட்டைக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஊரின் பாதுகாப்பிற்காக கோபுரத்தின் உயரத்தில் இந்த கருங்காலி கட்டைகள் வைக்கப்படும்.

karungali

பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை நேர்மறை ஆற்றலையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி கொண்ட இந்த கருங்காலிக் கட்டையை உங்களுடைய வீட்டிலும் வாங்கி வைத்து பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நிச்சயம் படிப்படியாகக் குறையும். கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியின் மூலமாகவும் உங்களுடைய வீட்டிற்கு எந்த பிரச்சனையும் வராது. நல்லது மட்டுமே நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த காரியமும் நமக்கு நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -