வீட்டில் இந்த விநாயகரை வைத்து தினமும் வழிபாடு செய்தாலே போதும். தோல்வி, உங்கள் வெற்றிக்கு குறுக்கே வந்து நிற்காது.

vinayagar
- Advertisement -

வெற்றியை நோக்கி நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல வேண்டும் என்றால், கட்டாயமாக தோல்வியையும் தடைகளையும் தடங்கல்களையும் கடந்து தான் செல்ல வேண்டும். இப்படி வெற்றியை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்களை கண்டு நாம் மனம் வருந்தாமல் இருக்க, வரக்கூடிய துன்பங்களை எதிர்த்து நிற்க, மன உறுதியைப் பெற சில நேர்மறையான விஷயங்களை நம்முடைய முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தடைகளைத் தகர்க்கும் விக்னங்களை தீர்க்கவும் விநாயகர் வழிபாட்டிற்கு முதலிடம் உண்டு. பெரும்பாலும் இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

karungali1

விநாயகருக்கு பலவகை நாமங்கள் உண்டு. பலவகை வழிபாட்டு முறைகள் உண்டு. அந்த வரிசையில் இன்று நாம் ஒரு சக்திவாய்ந்த விநாயகர் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகர் வழிபாடு என்றாலே அது சக்தி வாய்ந்தது தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வழிபாடு அதற்கும் ஒரு படி மேலே சக்திக்கும் மேல் சக்திவாய்ந்த வழிபாடு, என்று வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பெரும்பாலும் நாம் எல்லோருமே கருங்காலிக் கட்டையை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த கருங்காலி கட்டையானது மின் கதிர்வீச்சுகளை அதிகப்படியாக ஈர்க்கும் தன்மை கொண்டது. நிறைய மருத்துவ ரீதியாகவும் இந்த கருங்காலிக் கட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். இதையே நாம் ஆன்மீக ரீதியாக பார்த்தால், நேர்மறை ஆற்றலையும் பிரபஞ்சத்தின் நல்ல சக்தியை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாக நம்பப்பட்டு வருகிறது.

vinayagar1

குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த கருங்காலி கட்டை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் நிறைவாக முழுமையாக பரவியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த கருங்காலி கட்டை இருக்கும் வீட்டில் கண் திருஷ்டி அண்டாது, காரிய தடை இருக்காது இறை சக்தியானது அந்த இடத்தில் நிறைந்திருக்கும்.

- Advertisement -

இத்தனை அருமை பெருமைகளை கொண்ட கருங்காலிக் கட்டையில் சிறிய பிள்ளையாரை வடிவமைத்து நம் வீட்டில் வைத்துக் கொண்டால் எல்லா வளமும் எல்லா செல்வமும் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கருங்காலிக் கட்டையோ நேர்மறை ஆற்றல் நிறைந்தது. விநாயகர் வழிபாடு தடைகளை தகர்ப்பது. ஆக இந்த இரண்டு விஷயங்களும் ஒன்று சேரும்போது அபரிமிதமான நல்ல சக்தி நம் வீட்டில் நிலைத்திருக்கும்.

vinayagar2

கருங்காலி கட்டையால் செய்யப்பட்ட விநாயகரை பூஜை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும். தினம்தோறும் அந்த விநாயகருக்கு உங்கள் கைகளால் அறுகம்புல்லை சாத்திவிட்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு விட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக எந்த ஒரு தடங்கலும் வரக்கூடாது. குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்க வேண்டும். செல்வவளம் நிறைந்திருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலே போதும். வேண்டிய வரங்கள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். தோல்வி உங்களை நெருங்காது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -