கருப்பு நிற ஆடையை அணியக்கூடாத ராசிகள் எவை? அதிலும் சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க.

black
- Advertisement -

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் நீங்க சனிக்கிழமை அன்று செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம் ஒன்றையும், இதனுடன் சேர்த்து எந்த ராசிக்காரர்கள் எல்லாம் சனிக்கிழமை கருப்பு நிற ஆடை அணியக்கூடாது என்பதை பற்றியும் ஆன்மீகம் சார்ந்த பொதுப்படையான தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பலன் பெறலாம்.

சனிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பொதுப்படையான பரிகாரம்:
நிறைய பேர் வீடுகளில் எதிர்மறை ஆற்றலின் மூலம் பிரச்சினைகள் வருகின்றது. கண் திருஷ்டி காரணமாக கஷ்டங்கள் வருகிறது. இதிலிருந்து தப்பிக்க ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. சனிக்கிழமை தோறும் இதை செய்து வாருங்கள். சனிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டை சுத்தப்படுத்தி விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியும் எதிர்மறை சக்தியும் அழிந்து போக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லிவிட்டு அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சாறை வீட்டில் மூளை முடுக்குகளில் பிழிந்து விட வேண்டும். ஒவ்வொரு அறையின் நான்கு பக்கங்கள் இருக்கும் அல்லவா அந்த நான்கு திசையிலும் இந்த எலுமிச்சம் பழச்சாறை சிறிதளவு பிழிந்து விட்டு அந்த சக்கையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். சனிக்கிழமை தோறும் இதை செய்து வந்தாலே குடும்பம் சுபிட்சம் பெறும். இதை எல்லா ராசிக்காரர்களும் பின்பற்றி பல பெறலாம்.

சனிக்கிழமை எந்த ராசிக்காரர்கள் கருப்பு நிற ஆடையை போடக்கூடாது:
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம், கும்பம், இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கூடுமானவரை கருப்பு நிற ஆடையை அணியாமல் இருப்பது நல்லது. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை அன்று நீங்கள் கருப்பு ஆடையை அணிய வேண்டாம். ஜோதிடம் பொதுப்படையாக இந்த விஷயங்களை சொல்லி வைத்துள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -

பொதுவாகவே ஒரு நல்ல காரியத்திற்கோ அல்லது கோவில் குளங்கத்திற்கோ செல்லும்போது யாரும் கருப்பு நிற ஆடையை அணியாமல் இருப்பது சிறப்பு. கூடுமானவரை கருப்பு நிற செருப்பு போடுவதையும் தவிர்த்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்! எவ்வளவு பெரிய கடனையும் சுலபமாக திருப்பித் தர இந்த நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

அதேபோல மருந்து சம்பந்தப்பட்ட விஷயங்களை புதுசாக சனிக்கிழமை அன்று துவங்க வேண்டாம். புதுசாக மருந்து சாப்பிடுவது புதுசாக மருத்துவரை அணுகுவது அறுவை சிகிச்சை செய்வது போன்ற விஷயங்களை சனிக்கிழமை செய்யாதீங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சில விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன்.

- Advertisement -