இந்த மூலிகை பேஸ் பேக்கை ஒரே தடவை மட்டும் உங்க முகத்துல போட்டு பாருங்க, அதுக்கப்புறம் உங்க வீட்ல இருக்க மத்த கிரீம் எல்லாம் தூக்கி வீசிடுவீங்க.

- Advertisement -

கற்பூரவள்ளி இலையை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சளி, இருமல், தொண்டை புண் இப்படி கபம் தொடர்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு இந்த கற்பூரவள்ளி. இது மட்டுமின்றி கற்பூரவள்ளியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தோல் சார்த்த பிரச்சனைகளை கூட கற்பூரவள்ளி சரி செய்து விடும். ஆனால் இந்த கற்பூரவள்ளி வைத்து முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம் என்ற யாருக்காவது தெரியுமா தெரியவில்லை என்றால் இப்போது இந்த பதிவு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கற்பூரவள்ளி கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது இதை நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதற்கான காரணமும் அது தான். இதை சில பொருட்களுடன் சேர்த்து நம் முகத்தில் தொடர்ந்து தேய்த்து வர முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள், இறந்த செல்கள் ஆகியவற்றை நீக்கி முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -

முதலில் நான்கு அல்லது ஐந்து கற்பூரவள்ளி இலைகளை எடுத்து சுத்தமான நீரில் அலசி ஒரு சிறிய உரலில் (மிக்ஸி ஜாரில் அரைக்க கூடாது) போட்டு நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்து எடுத்து சாறு எடுக்க போவதில்லை அப்படியே அரைத்து தான் பூச போகிறோம். எனவே பேஸ்ட் போல் நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்தால் போதும். இத்துடன் ஒரு ஸ்பூன் தயிர், தயிர் இல்லை என்றால் ஒரு ஸ்பூன் பால் (காய்ச்சிய பால், காய்ச்சாத பால் ஏதுவாக இருந்தாலும் பரவாயில்லை) அடுத்ததாக ஒரு ஸ்பூன் கடலை மாவு கடைசியாக ஒரு அரை எலுமிச்சம் பழ சாறு அனைத்தையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து விடுங்கள்.

இப்போது உங்கள் முகத்தை நன்றாக துடைத்து விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் இது உங்கள் முகத்தோடு ஒட்டி நன்றாக காய்ந்து விடும். இதன் பிறகு லேசாக தண்ணீர் தொட்டு உங்கள் முகத்தில் தேய்த்து ஒரு பத்து நிமிடம் இந்த கிரீமை வைத்து மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு முகத்தை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு அலசி துடைத்து விடுங்கள். இப்போது உங்கள் முகம் பளிச்சென்று மாறியிருப்பதை நன்றாகவே உணருவீர்கள்.

- Advertisement -

இதை அடிக்கடி வேண்டியது இல்லை வாரம் ஒரு முறை போட்டாலே போதும். இதில் சேர்த்து இருக்கும் எலுமிச்சை, தயிர், கடலை மாவு அனைத்துமே முகத்தை நல்ல நிறமூட்ட பயன்படுத்தும் பொருட்கள் தான். எனவே வாரம் ஒரு முறை மட்டும் இந்த பேக் போட்டாலே போதும் உங்கள் முகம் பளிச்சென்று மின்னத் தொடங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: மீதமான இட்லி இருந்தா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க. இதிலிருந்து ஒரு துண்டு இட்லி கூட யாருக்கும் மிச்சம் கிடைக்காது.

இது போல முகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இயற்கையாக கிடைக்கும் இது போன்ற பொருட்களை கொண்டு அழகாக்கி கொள்ளவதோடு பணத்தையும் நேரத்தையும் மிச்ச படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -