கண் கருவளையம் நீங்க இயற்கை சொல்லும் இந்த 5 குறிப்புகள் போதும். இதை பின்பற்றினாலே ஐந்து நாட்களில் கண் கருவளையம் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போகும்.

karuvalaiyam
- Advertisement -

கண் கருவளையம் எதனால் வருகிறது என்று பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அதிக நேரம் டிவி பார்ப்பது, அதிக நேரம் போன் பார்ப்பது, மன அழுத்தத்தோடு இருப்பது, போன்ற தவறுகளை நாம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனாலும் பார்ப்பதற்கு அழகாக தெரிய வேண்டுமே, இந்த கருவளையத்தை குறைப்பதற்கு, சில நாட்களில் கண்ணுக்குத் தெரியாமல் கருவளையம் காணாமல் போவதற்கு, ஏதாவது வழி உண்டா. இயற்கையாக ஒரு சில வழிகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் ஐந்து குறிப்புகளை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த ஐந்து குறிப்புகளில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதா, உங்களுடைய ஸ்கின்னுக்கு எது செட் ஆகும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் பின்பற்றி பாருங்கள். ஐந்து குறிப்புமே உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் வாரம் ஒரு குறிப்பை பின்பற்றினாலும் தவறு கிடையாது. வாங்க அந்த அழகான அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குறிப்பு 1:
ஒரு பௌலில் காபி தூள் 1/4 ஸ்பூன், அரிசி மாவு 1/4 ஸ்பூன், தேவையான அளவு தேன் ஊற்றி, இதை திக் பேஸ்ட் போல கலந்து அதை அப்படியே உங்களுடைய கருவளம் இருக்கும் இடத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். 20 நிமிடம் வைத்தாலும் தவறு கிடையாது.

குறிப்பு 2:
ஒரு பவுலில் கடலை மாவு 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, தயிர் தேவையான அளவு ஊற்றி, இதையும் திக் பேஸ்ட் போல கலந்து கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மேலே திக்காக பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 3:
அடுத்தபடியாக ஒரு பவுலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, நன்றாக குழைத்து இதை உங்கள் கண்ணை சுற்றி தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். கிளாக் வைஸ் மசாஜ் செய்ய வேண்டும். ஆன்டி கிளாக் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மாறி மாறி மசாஜ் செய்துவிட்டு, பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள்.

குறிப்பு 4:
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி விட்டு துருவி பிழிந்தால் சாறு கிடைக்கும். அதை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து அந்த பஞ்சை கண்ணுக்கு அடியில் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி படுத்துக் கொள்ளுங்கள். பிறகு பஞ்சை எடுத்து விடலாம்.

- Advertisement -

குறிப்பு 5:
ஒரு சிறிய பவுலில் ஆலோவேரா ஜெல் 1 ஸ்பூன், விட்டமின் இ ஆயில் கேப்சூல் ஒன்று மட்டும் பயன்படுத்துங்க. உள்ளே இருக்கும் ஜெல்லை, அந்த அலோவேரா ஜெல்லில் பிழிந்து, கலந்தால் ஒரு பேக் நமக்கு கிடைக்கும். இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் பயன்படுத்தலாம். பேக் எல்லாம் போட்டு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, இந்த ஜெல்லை கண்ணுக்கு அடியில் தடவி லேசாக மசாஜ் செய்து தூங்கி விடுங்கள். மறுநாள் காலை எப்போதும் போல எழுந்து முகம் கழுவிக்கொள்ளலாம். (இந்த செல்லை நைட் கிரீம் ஆக பயன்படுத்த வேண்டும்.)

இதையும் படிக்கலாமே: மாதத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக் போட்டாலே முடி கொட்டாது. கருகரு கூந்தலுக்கு உலகத்திலேயே பெஸ்ட்டான ஹேர் பேக்னா, அது இது மட்டும்தான்.

மேலே சொன்ன எந்த குறிப்பு உங்களுக்கு செட் ஆகுமோ அதை ட்ரை பண்ணி பாருங்க. தினமும் போடலாம். தொடர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு மேல் இந்த குறிப்புகளை பின்பற்றி வரும்போது கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் குறைந்ததில் நல்ல வித்தியாசம் தெரியும். எந்த பேக்கை கண்ணுக்கு கீழே போட்டாலும் கண்ணைத் திறந்து போன் பாக்காதீங்க. டிவி பார்க்காதீங்க. கண்ணை மூடி ரிலாக்ஸ் ஆக அப்படியே படுத்துக்கோங்க. அப்போதுதான் பேக் வேலை செய்யும். அழகு குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -