கருவளையம் நீங்க டிப்ஸ் | Karuvalayam poga tips Tamil

Karuvalayam poga tips Tamil
- Advertisement -

கருவளையம் மறைய டிப்ஸ் | Karuvalayam poga tips in Tamil

நாம் இந்த உலகத்தை பார்த்து ரசிப்பதற்கு உதவும் முக்கிய உறுப்புகள் நம் கண்கள் தான். அப்படிப்பட்ட கண்களை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். நவீன கால நாகரிக வளர்ச்சியால் இன்று பெரும்பாலானோர் கணினி, கைபேசி பயன்படுத்துகின்ற சூழலில் இருக்கின்றனர். இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண் சம்பந்தமான பல நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானதாக இன்றைய இளைய தலைமுறையை அதிகளவில் பாதிப்பது கண்களுக்கு கீழாக தோன்றும் கருவளையம் தான். இந்த கருவளையங்களை ரசாயன மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் போக்குவது எப்படி (Karuvalayam poga tips Tamil) என்பது குறித்து இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கருவளையம் உடனே நீங்க

கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் கண்களுக்கு சரியான ஓய்வளிக்காமல் நெடுநேரம் கண்கள் விழித்திருந்து செயலாற்றுவது தான். அதிலும் குறிப்பாக தற்காலத்தில் பலரும் இரவில் சீக்கிரம் தூங்காமல், நெடுநேரம் கணினி, கைப்பேசிகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் தான் இப்படி நெடுநேரம் கைப்பேசிகளை பயன்படுத்தி, அதனால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட்டு வருந்துகின்றனர். கருவளையம் நீங்க ரசாயன பொருட்களை பயன்படுத்தும் பொழுது சிறிது காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதை தவிர்க்க இயற்கையான முறையில் கருவளையம் போக சில குறிப்புகளை இங்கு நாம் பார்க்கலாம்.

- Advertisement -

கருவளையம் நீங்க – தக்காளி சாறு

வைட்டமின் சத்துக்களை அதிகம் கொண்ட ஒரு காய் வகையாக தக்காளி இருக்கின்றது. தக்காளியை நன்கு பிழிந்து 2 ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்து, அதில் சிறிதளவு எலுமிச்சம் பழ சாற்றை சேர்த்து நன்கு கலந்து, கண்களுக்கு கீழே இருக்கின்ற கருவளையங்கள் மீது தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

tea

கருவளையம் நீங்க டிப்ஸ் – டீ பேக்

டீ பேக்குகளை பயன்படுத்தியும் கண்களைக் கீழே இருக்கின்ற கருவளையங்களை போக்கலாம். பயன்படுத்தப்படாத ஒரு டீ பேகை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு உடனே அந்த டீ பேக்கை குளிர்சாதனப் பெட்டியில் 15 நிமிடம் வரை வைக்க வேண்டும். அந்த டீ – பேக்குகள் நன்கு குளர்ச்சி அடைந்ததும், உங்களது கண்களின் மீதாக வைத்து சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் உங்களின் கண்களை கழுவவேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண்களுக்கு கீழாக இருக்கின்ற கருவளையங்கள் விரைவில் நீங்கும்.

- Advertisement -

கருவளையம் மறைய – உருளைக்கிழங்கு

karuvalayam poga tips Tamil: ஒரு சிறிய அளவு உருளைக்கிழங்கை எடுத்து குறுக்காக நறுக்கி, நறுக்கிய அந்த உருளைக்கிழங்கு பகுதியை உங்களின் கண்களுக்கு கீழாக இருக்கின்ற ககருவளைய பகுதியின் மீது நன்கு தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் கருவளையங்கள் நீங்கும்.

karuvalayam poga tips in tamil

கருவளையம் உடனே நீங்க – வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்ற ஒரு காய் வகையாகும். பெரிதாக இருக்கின்ற ஒரு வெள்ளரிக்காயை குறுக்கு வாக்காக இரண்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்து, சாய்ந்தவாறு படுத்துக்கொண்டு உங்கள் இரண்டு கண்களின் மீதும் அந்த இரு வெள்ளரிக்காய் துண்டுகளை ஒரு 15 நிமிடங்கள் அளவிற்கு வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர கண்கள் குளிர்ச்சியடைந்து கண்களுக்கு கீழாக இருக்கின்ற கருவளையங்கள் மறையும்.

- Advertisement -

கண் கருவளையம் மறைய – புதினா இலை

கை நிறைய புதினா இலைகளை பறித்து எடுத்துக்கொண்டு, அதை நன்கு சுத்தம் செய்து பிறகு, கைகளாலேயே மசிக்க வேண்டும். மசிக்கும் பொழுது வருகின்ற புதினா சாற்றை சேகரித்து கண்களுக்கு கீழாக ஏற்பட்டிருக்கின்ற கருவளையங்களின் மீது நன்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் கண்களுக்கு கீழாக ஏற்படுகின்ற கருவளையங்கள் நீங்கும்.

karuvalayam remove tips in tamil - Puthina

கருவளையம் மறைய டிப்ஸ் – பாதம் பால் பேஸ்ட்

karuvalayam poga tips Tamil: பாதம் பாலுடன் சேரும் பொழுது அது கண் கருவளையம் நீங்க உதவுகிறது. சிறிதளவு பாதாமை எடுத்துக் கொண்டு அதை நன்கு பொடியாக்கி, அதை பாலில் பேஸ்ட் பதத்திற்கு வரும் அளவில் சேர்க்கவேண்டும். இந்த பாதாம் பால் பேஸ்டை கண் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, பத்து முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு சுத்தமா கழுவு எடுத்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் கருவளையம் நீங்கும்.

கருவளையம் நீங்க க்ரீம்

கடைகளில் கருவளையம் நீங்க cream வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் இயற்க்கையான முறையில் ஒரு கிரீம் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்க்கு தேவையானது சந்தனம் மற்றும் ஜாதிக்காய். இவை இரண்டையும் நன்கு இழைத்து கண் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவில் 10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, குளிந்த நீரில் கழுவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -