வாஸ்துபடி சமையலறையிலும் கழிவரையிலும் செய்யக்கூடாத தவறு

vasthu1
- Advertisement -

இடப்பற்றாக்குறை காரணமாக நாம் கட்டக் கூடிய சிறிய வீட்டில், பொருட்களை அடுக்கி வைப்பதற்கு இடம் இல்லாமல் போகிறது. அதற்காக பக்காவான பிளான் என்று சொல்லி நிறைய மாற்றங்களை செய்கின்றோம். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இப்படி திறமையாக நாம் போடக்கூடிய பிளானில், நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட, நம்முடைய வீட்டில் பெரிய அளவில் பிரச்சனைகளை கொடுப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அதுதான் வாஸ்து பிரச்சனை. அந்த வரிசையில் ஒரு வீட்டில் சமையலறையிலும், கழிவரையிலும் வாஸ்துபடி செய்யக்கூடாத இரண்டு தவறுகள் என்னென்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வீட்டில் வாஸ்து படி செய்யக்கூடாத தவறுகள்

முதல் தவறு. கழிவறையை பற்றி பார்த்து விடுவோம். இப்போதெல்லாம் கழிவரையும் குளியலறையும் ஒன்றாக சேர்த்து வைக்கக்கூடிய சூழ்நிலை இடப்பற்றாக்குறை காரணமாக இருக்கிறது. குளியலறையோடு சேர்த்து, கூடுமானவரை கழிவறை, கட்டும்போது அந்த இடத்தை கொஞ்சம் உயரமாக வைத்து கட்டுகின்றோம்.

இப்படி பாத்ரூமில் ஒரு இடத்தை மட்டும் உயரமாகவும், மற்ற இடங்களை தாழ்வாகவும் வைத்து கட்டுவது சிறப்பானது அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. பாத்ரூம் என்றால் அதன் உள்ளே இருக்கும் தரை சரிசமமாக இருக்க வேண்டும். கழிவறையை ஒரேடியாக உயர்ந்த நிலையில் கட்டி வைக்கக் கூடாது. இது ஒரு விஷயம்.

- Advertisement -

இரண்டாவதாக இப்போது எல்லோருமே கழிவறைக்கு மேலே ஸ்லாப் அமைத்து விடுகிறார்கள். அதாவது கழிவறையின் உயரத்தை குறைத்து, கழி வரைக்கும் மேலே பொருட்களை தேக்கி வைப்பதற்கு ஒரு இடத்தை கட்டி கொள்கிறார்கள். வாஸ்துபடி இதுவும் தவறு. கழிவறைக்கு மேலே பரனை அமைக்க கூடாது. இன்று கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில் இந்த தவறு நடக்கிறது. இதையும் தவிர்ப்பது நல்லது என்று வாஸ்து நிபுணர்களால் சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவதாக சொல்லப்படக்கூடிய விஷயம். சமையலறை மேடைக்கு கீழே ஒரு சின்ன ஸ்லாப் கட்டுகிறார்கள். பொருளை அடுக்கி வைப்பதற்கு. அதுவும் ரொம்ப ரொம்ப தவறு. சமைப்பதற்கு மேடை அமைக்கின்றோம். சமையல் மேடைக்கு மேலே கேஸ் ஸ்டவ் இருக்கும்.

- Advertisement -

இந்த சமையல் மேடைக்கு கீழ் பக்கத்தில் ஒரு செங்கலை வைத்து அடுக்கி தரையில் இருந்து, ஒரு படி மேலே உயர்த்தி பொருட்களை அடுக்க திட்டு அமைக்க கூடாது. இது வீட்டு பெண்களுக்கு அசௌகரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் மேடைக்கு கீழே, தரைப்பகுதியில் ஒரு செங்கலை வைத்துக் கூட திட்டு காட்டாதீங்க. இதுவும் சரியான வாஸ்துவாக நமக்கு சொல்லப்படவில்லை.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் பெருமாள் வழிபாடு

இதன் மூலம் நிச்சயம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பிரச்சனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான விஷயம்தான் ஆனால் தற்போது எல்லோரும் செய்யக்கூடிய தவறு இது. உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் அதை மாற்றி பாருங்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு நிச்சயம் நல்லது ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -