பணம் தரும் பெருமாள் வழிபாடு

perumal1
- Advertisement -

பணத்தைக் கொட்டி கொட்டி கொடுப்பவர் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது இந்த திருப்பதி பெருமாள்தான். நிறைய பேருக்கு திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபாடு செய்து வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் திருப்பதிக்கு சென்று வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில பேருக்கு நிதிநிலைமை காரணமாக திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும்.

சில பேரால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் திருப்பதி பெருமாளை சென்று தரிசனம் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்ட பலனை பெற வேண்டும் என்றால் என்ன செய்வது. கடச்சுமை குறைய செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் இருந்தபடியே திருப்பதி பெருமாளை எப்படி வழிபாடு செய்வது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

செல்வ செழிப்பை தரும் திருப்பதி பெருமாள் வழிபாடு

செல்வ செழிப்பில் உயர வேண்டும் என்றால் பெருமாளை வெள்ளிக்கிழமை அன்று திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதிக்கு சென்றாலே ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த திருப்பதி உண்டியலில் போடக்கூடிய வழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் ஒரு ஆயிரம் ரூபாய், நீங்கள் அந்த உண்டியலில் செலுத்துவதாக இருந்தாலும் அதை பணமாக செலுத்தாமல், சின்ன குண்டுமணி தங்கமாக மாற்றி அந்த திருப்பதி பெருமாள் உண்டியலில் போட்டு விட்டீர்கள் என்றால் உங்களுக்கு அன்றிலிருந்து அதிர்ஷ்டம் அடிக்க தொடங்கி விடும்.

- Advertisement -

நீங்கள் திருப்பதி உண்டியலில் போடும் அந்த குண்டுமணி தங்கம் உங்களுடைய பண பிரச்சனையை படிப்படியாக குறைத்து விடும். அதிலும் வெள்ளிக்கிழமை தான் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முதலில் அலமேலு மங்கையில் இருக்கும் தாயாரை தரிசனம் செய்யுங்கள்.

வியாழக்கிழமையே கூட தாயாரை தரிசனம் செய்து விடலாம். இரண்டாவதாக வெள்ளிக்கிழமை திருப்பதி பெருமாளை தரிசனம் செய்கிறீர்கள். மூன்றாவதாக திருப்பதி மலைக்கு கீழே இருக்கும் கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்துவிட்டு தான் வீடு திரும்ப வேண்டும். இந்த முறைப்படி திருப்பதிக்கு சென்று வந்தவர்கள் வாழ்வில் நிச்சயம் திருப்பம் நடக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

சரி, எனக்கு திருப்பதிக்கு போகறதுக்கு சந்தர்ப்பமே அமையவில்லை. நாங்கள் என்ன செய்வது. நாங்களும் திருப்பதி ஏழுமலையானின் அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டுமே. திருப்பதி பெருமாள் படத்தை தங்க நிறத்தில் ஃபிரேம் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

திருப்பதி பெருமாள் ஆடை ஆபரணங்களோடு அப்படியே ஜொலிஜெலிப்பார் அல்லவா. அதேபோல சின்ன படத்தை தங்க நிற சட்டம் போட்டு பூஜை அறையில் மாட்டி வைத்து தினமும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்யுங்கள். தினமும் பெருமாளுக்கு இரண்டு ஏலக்காய்களை நெய்வேதியமாக வைத்து பண கஷ்டம் தீர வேண்டும்.

எப்படியாவது திருப்பதிக்கு வந்து உன்னை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்களும் தீரும். நீங்கள் திருப்பதிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளையும் அந்த பெருமாள் ஏற்படுத்தி தருவார்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு

ரொம்பவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலே போதும். உங்கள் கஷ்டத்திற்கு சர்வ சாதாரணமாக தீர்வை அந்த ஆண்டவன் கொடுத்து விடுவான் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -