கஷ்டத்தை தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்

vetrilai
- Advertisement -

வெற்றிலை பாக்குக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக மகிமைகளை ஒன்று இரண்டு என்று அவ்வளவு சுலபமாக வரிசைப்படுத்தி நம்மால் சொல்லிவிட முடியாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எண்ணிலடங்காத கஷ்டங்களை சரி செய்வதற்கு இந்த வெற்றிலை போதும். பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வெற்றிலை பாக்கு பரிகாரங்களை பற்றிய அறிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கஷ்டம் தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்

வெற்றியை தரக்கூடிய இலை வெற்றிலை. ஆக இந்த வெற்றிலைக்கு பெயரிலேயே வெற்றி இருக்கிறது. வெற்றிலை பாக்கு பூஜைக்காக வாங்கினால் வீணாகப் போகிறது என்று இதை பூஜைக்கு கூட வாங்கி வைக்க தவறிவிடுகின்றோம். இந்த தவறை இனி பண்ணாதீங்க.

- Advertisement -

பேரம் பேசாமல் வெற்றிலை பாக்கு வாங்கி பூஜையில் வைத்தால் நமக்கு லட்சுமி கடாட்சம் பெருகும். பேரம் பேசாமல் வெற்றிலை வாங்கி பின் சொல்லக் கூடிய பரிகாரத்தை செய்தால் உங்களின் தீராத பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். உங்கள் குடும்பப் பிரச்சினைகள் வருவதற்கு காரணம் வாஸ்து தோஷமாக இருக்கிறதா.

பெரிய அளவில் பணம் கொடுத்து வாஸ்து நிபுணரை அழைத்து வந்து அதை சரி செய்ய முடியாது. அந்த அளவுக்கு பண வசதியும் இல்லை என்றால் இந்த பரிகாரத்தை உடனே செஞ்சிருங்க. உங்களுடைய நிலைவாசல் கதவின் அளவுக்கு ஏற்ப வெற்றிலை மாலை கட்ட வேண்டும். பேரம் பேசாமல் கடையிலிருந்து வெற்றிலை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த வெற்றிலையை ஒரு மஞ்சள் நிற நூலில் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயருக்கு மாலை போடுவது போல உங்கள் நிலை வாசலுக்கு மாலை போட போறீங்க. ‘ப’ வடிவத்தை கவிழ்த்து போட்டால் எப்படி இருக்கும். அதேபோல உங்கள் நிலை வாசலை சுற்றி இந்த வெற்றிலை மாலையை போடுங்க.

மூன்று நாட்கள் கழித்து இந்த வெற்றிலை மாலையை அவிழ்த்து ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய வாஸ்து தோஷமும் நீங்கும் குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும். இந்த சந்தோஷத்தை நீங்கள் வெற்றிலை மாலையை நிலை வாசலில் போட்ட அடுத்த ஐந்து நிமிடத்தில் உணருவீர்கள்.

- Advertisement -

வெற்றிலை பாக்கு தானம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்கள் ஏழை பெண்ணினுடைய கல்யாணம் இருக்கு, அந்த கல்யாணத்துக்கு 100 பேர் வருவாங்க எனும்போது, அந்த கல்யாணத்துக்கு வருபவர்களுக்கு எல்லாம் வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை கொடுக்க நீங்க உதவி செய்யுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு வெற்றிலை வாங்கி கொடுத்தால் போதும்.

இப்படி மகாலட்சுமி ஸ்வரூபமான இந்த வெற்றிலையை நீங்கள் அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் போது, அந்த மகாலட்சுமியின் அம்சமும் ஆசீர்வாதமும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். உங்கள் வீட்டில் திருமணமாகாத பெண் பிள்ளைக்கும் ஆண் பிள்ளைக்கும் சீக்கிரம் திருமணம் வைபவம் நடக்கும்.

25 வயதிற்கு மேல் உள்ள ஆண் பெண் எல்லாருமே இந்த வெற்றிலை பாக்கு தாம்பலத்தை போடலாம். தாம்பூலம் தரிக்க கூடிய பழக்கம் இன்று சுத்தமாக இல்லை. ஒரு சில நாட்களாக இதை பீடா என்று சொல்லியாவது கல்யாணத்தில் போட்டாங்க. இப்போது அந்த முறை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்

வெற்றிலையை எப்படியோ ஒரு வழியில் உள்ளுக்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. வெற்றிலை வைத்து சொல்லப்பட்டுள்ள மேல் சொன்ன ஆன்மீகம் பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமைந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -