12 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க, உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, வராகி அம்மனை நினைத்து வீட்டில் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும்.

varahi-cash
- Advertisement -

வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன். வாராஹி அம்மனுக்கு மொத்தமாக பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமேஸ்வரீ, சமய சங்கேதா, வராகி, போத்ரிணி, சிவா, வார்த்தாளீ, மகாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ என்று 12 பெயர்களை கொண்ட வாராஹி அம்மனை இந்த முறைபடி 12 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால் 13 வது நாள் நிச்சயமாக நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறும். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மன கஷ்டமாக, பண கஷ்டமாக இருந்தாலும் சரி அதற்கான ஒரு தீர்வினை நிச்சயமாக அந்த அம்பாள் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள்.

varahi-amman

நிறைய பேர் வீடுகளில் வாராஹி அம்மன் படத்தை வைத்து வழிபடும் வழக்கம் கிடையாது. காரணம் வாராஹி அம்மன் என்று சொன்னாலே நிறைய பேருக்கு பக்தி வருகிறதோ இல்லையோ மனதில் பயம் வந்து விடுகிறது. ஆனால் இந்த வாராஹி அம்மன் குழந்தை குணம் கொண்டவள். வாராஹியை நம்பி இவள் பாதங்களை சரணடைந்தவர்களை, அம்பாள் என்றைக்குமே கைவிட்டது கிடையாது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மனின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. சுத்தமான மஞ்சள் பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி கரைத்து மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மஞ்சளில் நிலக்கடலை இரண்டை எடுத்து, வாராகி அம்மன் முகத்தில் இருக்கும் கொம்பு போல வைத்துக்கொள்ள வேண்டும்.

பிடித்து வைத்திருக்கும் மஞ்சளின் மேல் பக்கத்தில் குங்குமப்பொட்டு வைத்து இந்த மஞ்சளை வாராகி அம்மனாக நீங்கள் பாவித்துக் கொண்டு, உங்களுடைய பூஜை அறையில் வைத்து 12 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். தினமும் வாராஹி அம்மனுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து அம்பாளின் முன்பு அமர்ந்து ‘ஓம் வாராஹி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய கஷ்டங்களை வாராஹி அம்மனிடம் மனதார சொல்லி இறுதியாக அம்மனுக்கு தீபாராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

பன்னிரண்டு நாட்களும் உங்களுடைய கோரிக்கைகளை அம்மனிடம் மனதார நம்பிக்கையோடு வையுங்கள். ஒரே கோரிக்கையாக இருக்கட்டும். எவ்வளவு பெரிய கோரிக்கையாக இருந்தாலும் அது உங்களுடைய வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்ற சூழ்நிலை இருந்தாலும், அதை நடத்திக் காட்டும் சக்தி கொண்டவள் தான் இந்த வாராஹி தாய். எண்ணி 13வது நாள் நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறி இருக்கும். உங்களுடைய பூஜையை நீங்கள் நம்பிக்கையோடு செய்து இருந்தால். வாராஹி அம்மன் பூஜையில் உடல் தூய்மையோடு மனத்தூய்மையும் மிக மிக அவசியம். எந்த ஒரு பொய் பொறாமை கெட்ட எண்ணத்துடன் வாராகி தாயை நம்மால் நெருங்க முடியாது.

varahi

12 நாள் இந்த பூஜையை முடித்துவிட்டு 13ஆவது நாளிலிருந்து நீங்கள் மஞ்சளில் அம்மனை ஆவாஹனம் செய்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா, அந்த மஞ்சளை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் அந்த மஞ்சளை நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு பண கஷ்டம் என்பதே வராது. வீட்டில் செல்வ மழை பொழியும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் வாராகி அம்மனின் பாதங்களை பற்றிக்கொண்டு மேல் சொன்ன முறைப்படி வரங்களைக் கேட்டுப் அருளாசியை பெறலாம் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -