வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமும் ஒரு நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாக, கட்டி கற்பூரத்தைப் வீட்டிற்கு வெளியே இப்படி ஏற்றினால் போதும்.

neruppu1
- Advertisement -

பணம் மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சனை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நிறைய பேருக்கு பணத்தைத் தவிர வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில வீடுகளில் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவியால் பிரச்சனை. சில வீடுகளில் உறவுகளுக்குள் பிரச்சனை, சில வீடுகளில் குழந்தைகள் மூலம் மன கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கும். சில பேருக்கு தனக்கு இருக்கக்கூடிய முன் கோபமே ஒரு பிரச்சனையாக இருக்கும். சிலபேருக்கு அவர்களிடமிருக்கும் கோழைத்தனம் ஒரு பிரச்சனையாக இருக்கும்.

இப்படி பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். உங்களுடைய வாழ்க்கையில் உங்களை கஷ்டப் படுத்தக் கூடிய எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு சுலபமான தீர்வு தரக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இதுதாங்க என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனை. இந்தப் பிரச்சனையை நான் கடந்து சென்றுவிட்டால் என்னுடைய வாழ்க்கையை நான் ஜெயித்து விடுவேன். நன்றாக வாழ்ந்து விடுவேன். என்று சொல்லப்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், கண்ண மூடிகிட்டு உங்களோட குலதெய்வத்தை வேண்டிக் கேட்டு, இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடுங்கள்.

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பிரச்சனையை ஒரே வரியில் எழுதி விடுங்கள். ‘என்னுடைய முன் கோபம் குறைய வேண்டும். என் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைய வேண்டும். என் பிள்ளை நான் சொல்கின்ற பேச்சை கேட்க வேண்டும்.’ மாமியார் மருமகள் பிரச்சனை இருந்தால் கூட அந்த பிரச்சனையை எழுதலாம். எதிரி தொல்லை இருந்தாலும் அந்த பிரச்சனையை எழுதலாம். எதுவாக இருந்தாலும் கோர்வையாக அந்த பிரச்சனையை ஒரு வரியில் அந்த காகிதத்தில் எழுதி விடுங்கள்.

- Advertisement -

அந்தக் காகிதத்தின் மேல் மிளகு – 9, வரமிளகாயின் விதை – 9, ஒரு கட்டி கற்பூரம் வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விடுங்கள். நீங்கள் பிரச்சனையை எழுதிய காகிதம் மிளகு வரமிளகாய் எல்லாமும் அந்த கற்பூரத்தோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகும்.

உங்கள் வீட்டிற்கு வெளியே வாசல் பகுதியில் இடம் இருந்தால் ஒரு ஓரமாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். கொல்லைப்பக்கம் இடம் இருந்தாலும் அங்கு செய்துகொள்ளலாம். இப்படி வீட்டிற்கு வெளியே எந்த இடத்திலுமே இடம் இல்லை என்றால் மொட்டை மாடியில் செய்யலாம். முடியாதவர்கள் பால்கனியில் செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு உள்ளே மட்டும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். இந்த பொருட்களை எல்லாம் எரித்த சாம்பலை அப்படியே அள்ளி கைபடாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல், 9 செவ்வாய்க்கிழமைகள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில், நீங்கள் எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று, இந்த பரிகாரத்தை செய்தீர்களோ, அந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு காலத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். ஒரே பிரச்சினைக்காக மட்டும்தான் 9 வாரமும் இந்த பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -