வாழ்க்கையில் வரும் அனைத்து துன்பத்திற்கும் எளிமையான ஆன்மீக பரிகாரம்

sivan
- Advertisement -

வாழ்க்கையில் பிரச்சனை என்பதற்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை அனைத்தையும் சமாளித்து வெளியில் வருவதற்காக நாம் அனைவரும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில பரிகாரங்களையும் மேற்கொள்ளும் பொழுது நம்மால் எளிதில் அந்த பிரச்சினையிலிருந்து வெளியில் வர முடியும். அப்படி நம் வாழ்க்கைக்கு தேவையான எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க:
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கஷ்டப்பட்டு பல முயற்சிகளை எடுத்து படிப்படியாக முன்னேறி வந்தாலும், சில பொல்லாதவர்களின் கண்களால் திருஷ்டி ஏற்பட்டு நமக்கு சில சரிவுகள் ஏற்படும். அந்த சரிவுகளை சரி செய்வதற்கும் யாருடைய கண் திருஷ்டியும் நம்மை அணுகாமல் இருப்பதற்கும் நாம் யோக நரசிம்மரை வழிபட வேண்டும். மேலும் அம்மன் கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழத்தை குத்தி வழிபட்டு வர நம்மை எந்த கண் திருஷ்டியும் ஒன்றும் செய்துவிட முடியாது.

சனிபகவானால் ஏற்படும் தோஷம் நீங்க:
சனீஸ்வரர் ஒரு சிறந்த நீதிமான். அவரின் திசை நடக்கும் காலகட்டத்தில் நம்மை சுற்றி இருப்பவர்களின் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு பல சோதனைகளை ஏற்படுத்துவார். அவரால் நமக்கு நன்மைகளை ஏற்பட்டாலும், அந்த நேரத்தில் நாம் மிகப்பெரிய சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் திங்கட்கிழமை தோறும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வதன் மூலம் அவரால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். மேலும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு தேங்காயில் நல்லெண்ணெய் ஊற்றி எள் முடிச்சு போட்டு தீபம் ஏற்றுவதன் மூலமும் அவரின் தாக்கங்கள் குறையும்.

கடன் தீர:
நமக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு நாம் யோக நரசிம்மரை வழிபட்டாலே போதும். அவரை வழிபடுவதால் எவ்வளவு பெரிய கொடிய கடனாக இருந்தாலும் அந்த கடனில் இருந்து நாம் சிறிது சிறிதாக வெளியில் வந்து விடுவோம். மேலும் ரோகினி நட்சத்திர நாளில் இரட்டை பிள்ளையாருக்கு சந்தன காப்பு செய்து அர்ச்சனை செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

திருமணம் விரைவில் கைகூட:
ஏதாவது ஒரு பிரச்சனையால் திருமண தடை ஏற்பட்டு திருமணம் நடக்காமல் தாமதம் ஆகி கொண்டு இருப்பவர்கள் உத்திர நட்சத்திர நாள் அன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வர வேண்டும். தொடர்ந்து 11 மாதங்கள் வரக்கூடிய உத்திர நட்சத்திரத்தில் இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுடைய திருமணத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் அவை அனைத்தும் சரியாகி விரைவில் திருமணம் கைகூடும்.

புத்திர பாக்கியம் பெற:
ஒரு உயிர் இந்த பூமியில் பிறக்க வேண்டும் என்றால் அதற்கு கடவுளின் பரிபூரணமான அருள் கிடைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதன் மூலம் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழில் லாபம் பெற ஏற்ற வேண்டிய தீபம்

நம் வாழ்க்கைக்கு தேவையான இந்த எளிமையான பரிகாரங்களை நமக்கு தேவைப்படும் நேரத்தில் செய்து பலன் பெறுவோம். மேலும் தேவைப்படும் நபர்களுக்கு இந்த பரிகாரங்களை கூறி அவர்களும் பலன் பெற உதவி புரிவோம்.

- Advertisement -