நிறைய காசு தரும் கற்றாழை பரிகாரம். வீட்டில் இருக்கும் கற்றாழை செடிக்கு இப்படி தண்ணீர் ஊற்றினால் பொன் பொருள் சேர்க்கை வீட்டில் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

செல்வ செழிப்பை உண்டாக்கக்கூடிய இந்த கற்றாழை செடியை வீட்டில் எப்படி வளர்ப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு விரிவான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் ரொம்பவும் பண கஷ்டம் இருக்கு. கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. மன நிம்மதி இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கண் திருஷ்டியால் குடும்பத்தில் முன்னேற்றம் இல்லை. கண் திருஷ்டியால் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை, கண் திருஷ்டியால் தொழில் முடக்கம், என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சரி வாங்க பதிவில் தொடர்ந்து பயணிப்போம்.

காசு தரும் கற்றாழை செடி பரிகாரம்:
முதலில் இந்த பரிகாரத்திற்காக தனியாக ஒரு தொட்டியில் கற்றாழை செடியை வைத்து வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டப்பாவில் கற்றாழை செடியை வைத்து வளர்ப்பதை விட, ஒரு மண் தொட்டியில் கற்றாழை செடியை வைத்து வளர்ப்பது சிறப்பு. உங்க வீட்ல கற்றாழை செடியை பூமியிலேயே நட்டு வளர்ப்பதற்கு இடம் இருக்கிறது என்றால் இன்னும் சிறப்பு. இந்த கற்றாழைச் செடியை வீட்டுக்கு உள் பக்கம், வெளி பக்கம், வாசல் பகுதி எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைத்து வளர்த்துக் கொள்ளலாம். பால்கனியின் கூட வைத்து வளர்க்கலாம். அது உங்கள் இட சௌகரியத்தை பொறுத்து இருக்கிறது.

- Advertisement -

ஆனால் செல்வ வளம் அதிகரிக்க நீங்கள் கற்றாழையை தண்ணீரை ஊற்றி வளர்த்தால், அந்த கற்றாழை செடியிலிருந்து அழகு குறிப்புக்காகவோ, ஆரோக்கிய குறிப்புக்காகவோ கற்றாழை இலைகளை வெட்டக்கூடாது. உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனியாக இன்னொரு தொட்டியில் கற்றாழைச் செடியை வளர்க்கவும்.

அடுத்தபடியாக கற்றாழை செடிக்கு எந்த தண்ணீரை ஊற்றுவது, எப்படி ஊற்றுவது. எந்தக் கிழமையில் ஊற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம். இரவு நீங்கள் தூங்க செல்லும் போதே ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சோம்பில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். அதில் இரண்டு ஏலக்காய், 11 சோம்பு, ஒரு சின்ன கட்டி வெல்லம் போட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை எடுத்து வைக்கும் போது பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு முழுவதும் இந்த தண்ணீர் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பிறகு இந்த சொம்பு தண்ணீரை கொண்டு போய் அப்படியே அந்த செடியில் ஊற்றனும். செல்வ செழிப்பிற்காக வீட்டில் தனியாக ஒரு செடி வளர்க்கிறீங்க பாத்தீங்களா அந்த செடியில் ஊத்திருங்க. தண்ணீரில் இருக்கும் அந்த ஏலக்காய் தூள் சோம்பு இவைகளை எல்லாம் வடிகட்டி எடுத்துவிட்டு வெறும் தண்ணீரை மட்டும் அந்த செடியில் ஊற்றுங்கள்.

இந்த கற்றாழை செடி வளர்வது போல உங்கள் வீட்டில் செல்வ வளமும் அதிகரிக்க வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டே அந்த தண்ணீரை செடியில் ஊற்றவும். தினமும் சாதாரணமாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். புதன்கிழமை மட்டும் இப்படி நீங்கள் தயார் செய்த இந்த நேர்மறை ஆற்றல் நிறைந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது செவ்வாய்க்கிழமை இரவே நீங்கள் இந்த சொம்பு தண்ணீரை உங்கள் வீட்டு பூஜை அறையில் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்து வந்தாலே வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் படிப்படியாக குறைவதை பார்க்கலாம். அதே போல கண் திருஷ்டியால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் படிப்படியாக சரியாகும். எப்படி தெரியுமா.

இதையும் படிக்கலாமே: எதிரிகளை ஒழித்துக்கட்டும் எருக்க இலை தீபம். இந்த தீபத்தை ஏற்றினால் எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டாங்க. உங்களை பார்த்தாலே தெரிச்சு ஓடிடுவாங்க.

அந்த கற்றாழையில் இருக்கக்கூடிய முள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழிக்க கூடியது. கண் திருஷ்டியை அழிக்கக் கூடியது. கெட்ட எண்ணத்தோடு அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தால் அந்த பொறாமை குணத்தால் வரக்கூடிய கெட்டதை அழித்துவிடும். ஆகவே இதில் முள் இருக்கிறது. இதை வீட்டில் வைத்தால் கஷ்டம் வரும் என்று யோசிக்காமல், அந்த முட்கள் எல்லாம் நமக்கு வரும் கெடுதலை அழிப்பதற்காக வளர்க்கக்கூடியது என்று சிந்தித்து செடியை வளர்க்கலாம். எவ்வளவு சொல்லியும் எனக்கு மனதில் திருப்தி இல்லை. அந்த செடியை வீட்டுக்குள் வைத்துக் கொள்வதில் இஷ்டம் இல்லை என்பவர்கள் பரிகாரத்தை செய்ய வேண்டாம். ஏனென்றால் நம்பிக்கை இல்லாமல் அரைகுறை மனதுடன் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு பலன் தராது என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -