பச்சைக் கற்பூரத்தை இந்த செடியின் முன்பு ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை வைத்தால் போதும். அந்த வேண்டுதல் உடனே பலிக்கும்.

pachai-karpoor
- Advertisement -

வேண்டுதல் பலிக்கவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்ற கஷ்டம் நமக்கு மட்டுமல்ல. உலகத்தில் மனிதராய் பிறந்து இருக்கும் அத்தனை பேருக்குமே இந்த கஷ்டம் இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதித்து விட்டால், பின்பு வாழ்க்கையில் நிச்சயமாக சுவாரசியம் என்ற ஒன்று இருக்காது. பிறகு இறைவனை நாம் வழிபடுவதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும். இப்படியிருக்க கஷ்டமே இல்லாமல் முயற்சி செய்யாமல் ஒரு விஷயத்தை நாம் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பது மிக மிகத் தவறு.

pachai-karpooram2

நினைத்த காரியம் நிறைவேற நம்முடைய வேண்டுதல் பலிக்க முதலில் நம்பிக்கையோடு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நிச்சயமாக நீங்கள் நினைத்த காரியம் வெற்றியில் முடியும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். இது முதல் வழி. இதை மனதில் நிறுத்திக் கொண்டு அதன் பின்பு உங்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிகாரம் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

- Advertisement -

நான்கு பக்கத்திலும், அதாவது நான்கு திசையிலும் எட்டுத் திக்கிலும் பரந்து விரிந்து வளரக்கூடிய தன்மையைக் கொண்டது கற்றாழைச் செடி. இந்த கற்றாழை செடி நான்கு பக்கத்தில் இருந்தும் பிரபஞ்சத்தில் இருக்கும் பேராற்றலை தன்னுள் ஈர்க்கக்கூடிய செடியாக சொல்லப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவங்கள் நிறைந்த இந்த கற்றாழைச் செடியை வைத்து தான் நம்முடைய வேண்டுதல் நிறைவேற, நம்முடைய ஆசைகள் நிறைவேற, நம்முடைய கனவு நினைவாக, ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

katralai

உங்களுக்கு இருக்கும் கோரிக்கைகள், ஆசைகள், வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அந்த வெள்ளைக் காகிதத்தை நன்றாக மடித்து அல்லது சுருட்டிய ஒரு மஞ்சள் நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். இதை அப்படியே கொண்டுபோய் கற்றாழை செடியில் நூலை வைத்து கட்டி விடுங்கள். கற்றாழை செடிக்கு முன்பாக ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி விட்டு, அந்த செடிக்கு முன்பு நின்றோ அல்லது அமர்ந்தோ உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். கற்றாழைச் செடி உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திற்கு அனுப்பி வைக்கும். கூடிய சீக்கிரத்தில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

எந்த வேண்டுதலாக இருந்தாலும் சரி, ‘நல்ல வேலை கிடைக்க வேண்டும். பணம் சம்பாதிக்கவேண்டும். கடன் தீர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.’ இப்படி உங்களுக்கு என்ன தேவையோ அதை வேண்டுதலாக இந்த பிரபஞ்சத்திற்கு சொல்வதற்கு இது ஒரு சிறப்பான வழியாக சொல்லப்பட்டுள்ளது.

praying-god1

முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையாக இந்த பரிகாரத்தை ஒரே ஒருமுறை செய்தால்கூட அதன்மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -