உங்கள் கையை விட்டுப் போன பணமெல்லாம் மீண்டும் உங்களைத் தேடி வர இந்த தாயத்தை போட்டுக்கொள்ளுங்கள்.

thayathu
- Advertisement -

என்னதான் கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் சரி, உட்கார்ந்தே சாப்பிட்டால் அந்த சொத்து குறையத்தான் செய்யும். குந்தித் தின்றால் குன்று அளவு சொத்தும் கரையும் என்பார்கள். நம்முடைய அப்பா அம்மா தாத்தா நமக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், நம்முடைய முயற்சியில், நாம் உழைத்து, வேலைக்கு சென்று நம் குடும்பத்திற்கான வருமானத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு மனிதனுக்கு அழகு. பரம்பரை சொத்தில் உட்கார்ந்து சாப்பிட கூடாது. பாட்டன் பூட்டன் சேர்த்து வைத்த சொத்து இருந்தால் அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ உழைத்து உனக்காக உன் குடும்பத்திற்காக என்ன சொத்து சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பது தான் கேள்வி.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம்மால் பணம் சம்பாதிக்க முடிகிறதோ இல்லையோ, சொத்து சுகம் வாங்க முடிகிறதோ இல்லையோ, நம் பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்தை விற்று ஆடம்பரமாக வாழுகின்றோம். சாப்பிடுகின்றோம். இது மிக மிக தவறு. சொல்லப்போனால் இதுவும் ஒரு பாவம் தான். உங்களுடைய முயற்சி இல்லாமல், உங்களுடைய உழைப்பு இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழக்கூடாது. எப்படியாவது உழைத்து நம் தேவைக்கான பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும், என்ற ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

என்ன செய்தாலும் கையில் பணம் நிற்கவில்லை. குடும்பத்தை காப்பாற்ற நிரந்தரமான வருமானத்தை தேடிக் கொள்ள எந்த வழியும் கிடைக்கவில்லை. எவ்வளவு தான் உழைத்தாலும் கையில் பணம் காசு தாங்கவில்லை என்பவர்களுக்காக தாந்திரீக ரீதியாக ஒரு மூலிகை வேர் பரிகாரத்தை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உழைப்போடு சேர்ந்த இந்த பரிகாரம் உங்களை ஊக்குவிக்கும்.

நம் வீட்டு அருகிலேயே சுலபமாக கிடைக்கக்கூடிய குப்பைமேனி வேர், கீழாநெல்லி வேர், இந்த இரண்டு வேர்களும் நமக்குத் தேவை. சிறியதாக வளர்ந்து இருக்கக்கூடிய செடியை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு ‘ஓம் நசி நசி மூலிகை சாபம் நசி’ என்ற மந்திரத்தை பதினோரு முறை சொல்லிவிட்டு, அந்த செடியை லேசாக வேரோடு பிடுங்கி எடுத்தால் வந்துவிடும்.

- Advertisement -

இந்த இரண்டு செடியிலிருந்து வேரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். கத்தியை வைத்து வெட்டக்கூடாது. உங்களுடைய விரல்களாலே கிள்ளி இந்த வேரை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அலசி விட்டு வேரை நிழலிலேயே உலரவைத்து, கீழாநெல்லி வேர் குப்பைமேனி வேர் இரண்டையும் ஒன்றாக சுருட்டி ஒரு தாயத்தில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். கையில் கட்டிக் கொள்ளலாம் அது நம்முடைய விருப்பம் தான். ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த தாயத்தை போட்டுக் கொள்ளலாம். குல தெய்வத்தை மனதில் வைத்துக்கொண்டே இந்த தாயத்தை தயார் செய்து கட்டிக்கொள்ளுங்கள்.

இந்த இரண்டு வேரும் ஒன்றாக சேர்ந்து உங்களுடன் இருந்தால் உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும். சில பேருக்கு மாத வருமானம் கூட நிரந்தரமாக இருக்காது. ஒரு மாதம் வருமானம் வரும். அடுத்த மாதம் சம்பாதிக்காமல், குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாமல் தடுமாறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கூட நிரந்தர வருமானத்தை தேடித் தரக் கூடிய சக்தி இந்த தாயத்திற்க்கு உண்டு.

நீங்கள் அனாவசியமாக இழந்த பணம் சொத்து இவைகளை கூட ஒரு சில நாட்களில் மீட்கும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய வீட்டில் உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கவில்லை சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள். எந்த வேலையையும் உருப்படியாக செய்ய வில்லை என்றாலும் அவர்களுக்கு இந்த தாயத்தை கட்டி விடுங்கள். சுறுசுறுப்பாக வேலை செய்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -