கேது தோஷம் விலக தானம்

kethu
- Advertisement -

வாழ்க்கையில் சக மனிதர்களால் பிரச்சனை வருகிறதோ இல்லையோ, கிரகங்களால் பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. கலியுகம் என்று சொல்கிறார்களே. இது தான் கலியுகமா. கிரகங்கள் நம்மை படாத பாடு படுத்தி எடுக்கிறது. அதிலும் இந்த ராகு கேது தோஷம் என்றால் சொல்லவே தேவை இல்லை.

வாழ்க்கையில் நிறைய தடுமாற்றங்கள் வந்துவிடும். உங்களுக்கும் இப்படிப்பட்ட தோஷம் இருக்கிறதா. கேதுவால் வாழ்க்கையில் நிறைய தடைகள் வருகிறதா. ஆன்மீகம் சொல்லும் எளிமையான இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள். நம்பிக்கையோடு இந்த தானத்தை செய்தால் நிச்சயம் கேதுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய தானங்கள்

முதலில் கேதுவுக்கு உண்டான தானியம் கொள்ளு. நீங்கள் பணம் விஷயத்தில் ரொம்பவும் சிரமப்படுகிறீர்கள் என்றால் வாரம் தோறும் சனிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் இந்த கொள்ளு தானியத்தை தானம் செய்ய வேண்டும். கொள்ளை அப்படியே வாங்கி தானம் கொடுத்தாலும் சரி, அல்லது சுண்டல் செய்து ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுத்தாலும் சரி, அது உங்களுடைய விருப்பம்.

ஆக மொத்தத்தில் கொள்ளு தானம் உங்கள் கையால் செய்தால், பணப்பிரச்சனை தீரும். இதோடு மட்டுமல்லாமல் முடிந்தவர்கள் பள்ளிக்கூடம் செல்லக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் வாங்கி தானம் கொடுக்கலாம். காவி வேட்டி வாங்கி முதியவர்களுக்கு, சாதுக்களுக்கு தானமாக கொடுக்கலாம். கோவில் வாசலில் யாசகம் கேட்பவர்கள் இருப்பார்கள்.

- Advertisement -

அவர்களுக்கு இந்த காவி உடையை நீங்கள் தானம் கொடுப்பது சிறப்பான பலனை தரும். ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்பவர்களுக்கு காலை அல்லது இரவு நேரத்திலோ அல்லது மதிய நேரத்தில் கூட பரோட்டா வாங்கி தானம் கொடுப்பது மிகப்பெரிய பலனை உண்டாக்கும். இன்றும் வீதி ஓரங்களில் பிளாட்ஃபாமில் படுத்து உறங்க கூடிய ஏழைகள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொசுவத்தி சுருள் வாங்கி தானமாக கொடுங்கள். கொசுவலை வாங்கி தானமாக கொடுங்கள். இதுவும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அதாவது இந்த கேது என்றால் சுருள் வடிவத்தைக் கொண்டவர். சுருள் வடிவத்தில் இருக்கக்கூடிய எந்த பொருளை நீங்க வாங்கி தானம் கொடுத்தாலும் அதனால் உங்களுக்கு கேதுவின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

துப்புரவு பணி செய்பவர்கள், ஊரை சுற்றி காட்டக்கூடிய கைடு, ஜோதிட துறையில் உள்ளவர்கள், கிளி ஜோசியம், கைரேகை பார்ப்பவர்கள், பிரசன்னம் பார்ப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கஷ்டப்படக் கூடியவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு உங்கள் கையால் செய்யப்படும் தானம் கேதுவை ப்ரீத்தி செய்யும் என்பதும் நம்பிக்கை. உங்களுடைய வசதிக்கு ஏற்ப உங்களால் எதை செய்ய முடியுமோ அதை திருப்தியோடு செய்து பலன் பெறலாம்.

- Advertisement -