கேதுவால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க செய்ய வேண்டிய சூட்சம பரிகாரங்கள்.

kethu
- Advertisement -

ஜாதக கட்டத்தில், கேது என்பவர் ஞான காரகனாகன். ஜாதகத்தில் கேது உச்சத்தில் இருந்தால் அவர்கள் குருமார்களாக அல்லது ஞானிகளாக அறிவாளிகளாக இருப்பார்கள். அதுவே ஒரு ஜாதக கட்டத்தில் கேது கெட்டுப் போயிருந்தால், அவர்களுக்கு புத்தி தடுமாற்றம் இருக்கும். யாரையும் நம்பாமல் நடந்து கொள்வார்கள்.

இப்போது உங்களுடைய ஜாதக கட்டத்தில் கேது கெட்டு போயிருந்தால் உங்களையே, நீங்களே நம்ப மாட்டீங்க. அந்த அளவுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு விடும். காரியத்தடை உண்டாகும் புத்தி தடுமாற்றம் குறுக்கு வழியில் சிந்திக்க தொடங்கிவிடும். பிறகு வாழ்க்கையில் பல பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கேதுவால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்வது.

- Advertisement -

கேதுவால் வரும் பிரச்சினையிலிருந்து விடுபட பரிகாரங்கள்

முதலில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன தெரியுமா. கண் தெரியாதவர்களுக்கு உதவுங்கள். ஜாதக கட்டத்தில் கேது உங்களுக்கு சரியாக இல்லை என்று தெரிந்து விட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுதான். கண் தெரியாதவர்களுக்கு தானமாக அந்தக் கருப்பு நிற கண்ணாடி வாங்கி கொடுப்பது, வாக்கிங் ஸ்டிக் வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளை செய்யலாம்.

வேறு ஏதாவது அவர்களுக்கு உங்களால் உதவி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை தேடிப்போய் செய்வது கேதுவால் வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும். கண் தெரியாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்வது, அவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல உதவியாக இருப்பது, ஆதரவற்ற கண் தெரியாத குழந்தையை காப்பகத்தில் சேர்ப்பது, போன்ற விஷயங்கள் ரொம்ப ரொம்ப நல்லதை கொடுக்கும்.

- Advertisement -

கண்ணு தெரியாதவர்களுக்கு இஞ்சி போட்டு சமைத்த உணவுகளை தானம் கொடுக்கலாம். உதாரணத்திற்கு தக்காளி சாதம், பிரியாணியில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்வோம் அல்லவா, அப்படி ஏதாவது தானம் கொடுப்பது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும். அடுத்தபடியாக கேதுவுக்கு உரிய தானியம் கொள்ளு.

கொள்ளு ரசம் வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை வைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு சின்ன வெள்ளை துணியில் கொள்ளு 2 கைப்பிடி வைத்து முடிச்சாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து ஏழு நாட்கள் படுத்து தூங்க வேண்டும். ஏழாவது நாள் அந்த கொள்ளை கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக கேதுவுக்கு ப்ரீத்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு தேவையான பொருள் அருகம்புல். அருகம்புலுக்கு உகந்த கடவுள் பிள்ளையார். தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு செய்து வந்தால் கேதுவால் வரக்கூடிய தாக்கங்கள் குறையும். பிள்ளையாருக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலை கட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால் ஹனுமனை வழிபாடு செய்யலாம். அனுமன் கோவிலுக்கு செல்லும்போதும் கட்டாயம் உங்கள் கையில் அருகம்புல் மாலையை கட்டி எடுத்து செல்ல வேண்டும். அருகம்புல் மாலை போட்டு ஹனுமன் வழிபாடு செய்யும்போதுதான் கேதுவால் வரக்கூடிய பிரச்சினை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.

படிக்கும் பிள்ளைகள் திங்கட்கிழமை தோறும் நவகிரக கோவிலில் இருக்கும் கேதுவுக்கு இரண்டு விளக்கு போட்டு வழிபாடு செய்து வர அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முதல் மதிப்பெண் எடுக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இனி ஜாதக கட்டத்தில் கேதுவால் பிரச்சனை என்று சொன்னால் கவலையே படாதீங்க. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் உங்களால் எது முடியுமோ அதை பின்பற்றி மன நிறைவோடு கேதுவை வழிபாடு செய்யும் பட்சத்தில் நிச்சயம் நல்ல பலனை உங்களுக்கு கேது கொடுத்துவிடுவார்.

- Advertisement -