கெட்ட நேரத்தில் கூட, உங்களுக்கு எந்த கெட்டதும் நடக்காது. இந்த செடியில் இருந்து இரண்டு இலைகளை பறித்து பையில வச்சுட்டு போங்க.

amman7
- Advertisement -

கெட்ட நேரம். இது எல்லோருக்கும் வர கூடிய ஒரு இக்கட்டான சூழ்நிலைதான். எல்லாமே நம் கைக்கு கிடைக்கிற மாதிரி வரும். ஆனால் கெட்ட நேரம், எதையுமே நம் கைக்கு எட்ட விடாமல் செய்துவிடும். பல நாள் முயற்சி செய்து ஒரு காரியத்தில் வெற்றி பெற, கடுமையாக உழைத்திருப்போம். ஆனால் கடைசி சமயத்தில் கெட்ட நேரம், நம்முடைய முயற்சியை எல்லாம் வீணடித்து விடும். கடைசியில் நமக்கு தோல்விதான் மிஞ்சும். அந்த சமயத்தில் நாம் ரொம்பவும் உடைந்து போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

நம்முடைய நல்ல நேரம் ஏரோபிளேன் வேகத்தில் போனால், அதைவிட வேகமாக கெட்ட நேரம் ஜெட் வேகத்தில் போகுது என்று சொல்லுவார்கள். இப்படி கெட்ட நேரம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும் சமயத்தில் இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல், சில பேருக்கு கெட்ட நேரத்தில் அதிக விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கும். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஏதாவது ஒரு இடத்தில் இடித்துவிட்டு கை காலை உடைத்துக் கொண்டு, ரத்த காயம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதையும் கெட்ட நேரம் என்று தான் சொல்லுவார்கள். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கெட்ட நேரத்திலும் கெட்டது நடக்காமல் இருக்க கையில் எடுத்துச் செல்ல வேண்டிய இலை:
நமக்கு கெட்ட நேரம் நடக்குதுன்னு நம்முடைய ஜோதிடர் சொல்லியோ அல்லது வேறு யாராவது மூலமாகவோ முன்கூட்டியே நிச்சயமாக அறிந்து கொள்வோம். யாரும் சொல்லவில்லை என்றாலும், நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் நமக்கு கெட்ட நேரம் நடக்குது என்று, அனுபவத்தால் நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கும்‌.

- Advertisement -

இந்த கெட்ட நேரத்தில் இருந்து தப்பிக்க, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்கி விடுங்கள். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் இலை, மருதாணி இலை. எண்ணிக்கை எல்லாம் கணக்கு கிடையாது. ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சம் மருதாணி இலைகளை போட்டு முடிச்சாக கட்டி உங்களுடைய பையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்ளுங்கள், அல்லது பாக்கெட்ல கூட வைத்துக் கொள்ளலாம். உங்களோடு இந்த மருதாணி இலை இருக்க வேண்டும்.

உங்கள் கையோடு எப்போதும் மருதாணி இலை இருந்தால், கெட்ட நேரத்தில் கூட உங்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது. எந்த ஒரு பெரிய தோல்வியும் வராது. கடைசி சமயத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த அம்பாள் உங்களை காப்பாற்றி விடுவாள். மருதாணி இலைக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்குதுங்க. அடிக்கடி விபத்தில் சிக்குபவர்கள் இந்த மஞ்சள் முடிச்சை அப்படியே உங்களுடைய வண்டியின் முன்னால், கட்டிக் கொள்ள வேண்டும். சைக்கிள் பைக் கார் நீங்கள் எந்த வண்டியை பயன்படுத்தினாலும் அந்த வாகனத்தின் முன்பு இந்த மருதாணி இலையை கட்டி தொங்க விட்டுக்கோங்க.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும் பணம் விறுவிறுன்னு சேர்ந்து கொண்டே இருக்குமாம்!

மாதத்தின் ஒரு நாள் உள்ளே இருக்கும் மருதாணி இலைகளை மாற்றினால் போதும். மருதாணி இலை காய்ந்தாலும் இந்த பரிகாரம் வேலை செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -