ஏழேழு ஜென்மத்துக்கும் பணப்பிரச்சனை வராமல் இருக்க ஏழு பன்னீர் ரோஜா போதும்.

mahalashmi6
- Advertisement -

ஏழேழு ஜென்மத்திற்கும் எங்களுடைய தலைமுறை பண கஷ்டப்படாமல் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது எங்களுடைய குடும்பம் மட்டும் அல்ல. எங்களுக்கு அடுத்தடுத்து வாழக்கூடிய தலைமுறைகளும் பணத்திற்காக ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது. அவர்களுக்கு தேவையான செல்வ வளம் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எங்களுடைய தலைமுறையில் வரக்கூடிய குழந்தை செல்வங்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் அமர்ந்து சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஏழேழு ஜென்மத்திற்கும் மகாலட்சுமி அம்சம் கிடைக்க செய்ய வேண்டிய ரோஜாப்பூ வழிபாட்டினை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

ஏழேழு ஜென்மத்திற்கும் பணக்கஷ்டம் வராமல் இருக்க

தலைமுறை தலைமுறையாக உங்கள் குடும்பம் செல்வ செழிப்பில் தழைத்தோங்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமை இந்த முறையில் மகாலட்சுமி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்திற்கு கட்டாயமாக தேவைப்படக்கூடிய பொருள் 7 பன்னீர் ரோஜாக்கள். பிங்க் நிறத்தில் இருக்கும் பன்னீர் ரோஜாக்கள் அல்லது இதை சிவப்பு நிற பன்னீர் ரோஜாக்கள் என்றும் சொல்லுவார்கள். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கணக்கு முக்கியம். ஏழு என்ற கணக்கில் பன்னீர் ரோஜாவை எடுத்துக் கொள்ளவும். வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜைக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தயார் செய்து விட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜை அறையில் அமர்ந்து இரண்டு உள்ளங்கைகளில் அந்த பன்னீர் ரோஜாவை வைத்து மகாலட்சுமி தாயை மனதார நினைத்து, உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் குடும்பம் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்கணும், கடன் சுமை குறையனும், வீட்டில் இருக்கும் குழந்தைகள் செல்வ செழிப்போடு வளரனும், இப்படி என்ன தேவையோ அந்த வேண்டுதலை மனம் உருகி செய்துவிட்டு, இந்த பன்னீர் ரோஜாவை அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். ஏழு வாரம் வெள்ளிக்கிழமை இதே போல வேண்டுதல் வைக்க வேண்டும்.

அதற்கு மேலும் அடுத்தடுத்த வாரம் இதேபோல வழிபாட்டை செய்தாலும் தவறு கிடையாது. ஆனால் தொடர்ந்து ஏழு வாரம் இந்த வழிபாட்டினை செய்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பண பிரச்சனைகள் தீரும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வறுமை வராமல் இருக்க ஒரு வழியை அந்த மகாலட்சுமி காட்டிக்கொடுப்பாள். இதேபோல பரிகாரத்தை நீங்கள் கோவிலிலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: பல லட்சம் கடனையும் அடைக்கும் பச்சைக் கற்பூர பரிகாரம்

ஏழு ரோஜா பூக்களை கையில் வைத்துக் கொண்டு, கோவிலில் அமர்ந்து மகாலட்சுமி தாயை மனம் உருகி வேண்டி, அந்த பூக்களை கோவிலில் இருக்கும் தாயாருக்கு கொடுக்கலாம். பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாரை தானே மகாலட்சுமி என்று சொல்லுவோம். அந்த கோவிலுக்கு சென்று இதேபோல பரிகாரத்தை செய்தாலும் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் ஏழு வாரங்களில் நிறைவேறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -