எந்த கெட்ட சக்தியும் நம்முடைய உடம்பில் ஊடுருவாமல் இருக்க, கெட்ட சக்தியால் ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க, என்ன செய்ய வேண்டும்?

rice5
- Advertisement -

பொதுவாகவே பலவீனமான மனதைக் கொண்டவர்களுடைய உடலில் எதிர்மறை ஆற்றல்கள் சீக்கிரமே குடிகொண்டு விடும் என்று சொல்லுவார்கள். மன உறுதியோடும், தைரியத்தோடும் இருப்பவர்களுடைய உடம்பிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றலும் அவ்வளவு சீக்கிரத்தில் நுழைய முடியாது. அப்படி மன உறுதியோடு இருப்பவர்களுக்கு கண் திருஷ்டியினாளும் கூட, எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆக ஒவ்வொருவரும் தைரியத்தோடு சேர்ந்த மன உறுதியுடன் தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல தகவலுடன் இந்த பதிவினை தொடங்கலாம்.

pacharisi

சில பேருக்கு உடல் ரீதியாக ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மருத்துவரிடம் சென்று உடலில் பரிசோதனை செய்து கொண்டாலும், உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால் உடலில் எப்போதுமே உபாதைகள் இருந்து கொண்டே வரும். தலை வலி, கால் வலி, வயிறு வலி, என்று ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் இந்த பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியாது.

- Advertisement -

இப்படிப்பட்ட உபாதைகள் எதனால் வருகிறது. கட்டாயமாக ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலின் தாக்கம் உடம்பில் இருப்பதால் தான். இதை தவிர்க்க தாந்திரீக ரீதியாக நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு சிறிய பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். நம் எல்லோருடைய வீட்டிலும் இருப்பதுதான் பச்சரிசி. இந்த பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் இரவே அந்த பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள்.

மறுநாள் காலை ஊற வைத்த பச்சரிசியில் இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, அடுப்பின் மீது வைத்து, வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ள வேண்டும். சூடு செய்த இந்த தண்ணீரை, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வர எதிர்மறை ஆற்றலினால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் நம்முடைய உடலிலிருந்து நீங்கும். (ஊற வைத்த அந்த ஒரு கைப்பிடி அரிசியை காக்கை குருவிகளுக்கு இறையாக தான் வைக்க வேண்டும் நீங்கள் சாப்பிட கூடாது.)

- Advertisement -

இப்படி மூன்று நாட்கள் இந்த பச்சரிசியை ஊற வைத்த தண்ணீரில் முறைப்படி குளித்தால், அந்த மூன்று நாட்கள் மட்டும் கட்டாயமாக இரவு தூங்கும் போது கிழக்குப் பக்கம் தலை வைத்து தூங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அப்போதுதான் பரிகாரத்திற்கு பலன் உண்டு.

sad-lakshmi

லட்சம் லட்சமாக பணம் செலவு செய்து, தீராத சில உடல் உபாதைகள் எதனால் நமக்கு இருக்கின்றது என்றே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கையில்லை என்றாலும் முயற்சி எடுத்து பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. நிச்சயமாக நீங்கள் எதிர்பாராத ஒரு நல்ல பலனை இந்த பரிகாரத்தின் மூலம் பெற முடியும். உங்களுக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை, எதிர்மறை ஆற்றல் உடம்புக்குள் ஊடுருவ கூடாது என்று நினைப்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை மூன்று நாள் செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -