வாரம் ஒரு முறை உங்களுடைய வீட்டில் இந்த தூபம் போட்டால் போதும். கெட்ட ஆத்மாக்கள், கெட்ட சக்திகள் உங்கள் வீட்டை நெருங்க கூட முடியாது.

dhupam
- Advertisement -

நம்முடைய வீட்டில் திடீரென்று ஒரு கெட்டது நடக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் தான். நாம் குடியிருக்கும் வீட்டை சுற்றி எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றது. எத்தனையோ கெட்ட விஷயங்களும் நடக்கின்றது. இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் நாம் நிற்கின்றோம். நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும் போது பிரச்சனை இல்லை. ஆனால் நம் வீட்டை சுற்றி எதிர்பாராத கெட்ட சம்பவங்கள் நடக்கும் போது அதனுடைய விளைவுகளின் தாக்கம் நம்முடைய வீட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது

கெட்ட சக்திகள், கெட்ட ஆவிகள், கெட்ட ஆத்மாக்கள், அமானுஷ்யமான இன்னும் பல சக்திகளால் நம் வீட்டிற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க நம் வீடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்க மிக மிக சுலபமான முறையில் ஒரு தூபம் எப்படி போடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஆவாரம் பூ, வெள்ளை குங்கலியம், தாமரை விதை இந்த மூன்று பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஆவாரம் பூ, தாமரை விதை காய்ந்ததானாகவே கிடைக்கும். அதை வாங்கி கொள்ளலாம். நம்முடைய வீட்டில் எப்போதும் போல தூபம் போடுவீர்கள் அல்லவா? அதே போல நெருப்பு மூட்டி அதில் சாம்பிராணி பொடியை போட்டு அதை நெருப்பில் இந்த மூன்று பொருட்களை சேர்த்து தூபம் போட்டு இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

இந்த தூபத்தை திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, இந்த மூன்று தினங்களில் போடலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு இருக்கின்றது பிரச்சினை இருக்கின்றது. வீட்டில் இருக்கும் பிள்ளைகள் சுறுசுறுப்பாக இல்லை. வீட்டில் பண கஷ்டம். கடன் சுமை. இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கொடுக்கக் கூடிய சக்தியும் இந்த தூபத்திற்கு உண்டு.

- Advertisement -

நிறைய பேர் வீட்டில் கண்ணுக்குத் தெரியாத நம்ப முடியாத நிறைய சம்பவங்கள் நடக்கும். இரவு என்னால் நன்றாகவே தூங்க முடியவில்லை. யாரோ ஒருவர் வந்து அழுத்துவது போல் இருக்கின்றது. வீட்டில் யாருமே இல்லாத சமயத்தில் யாரோ நடப்பது போல உணர்வு தோன்றுகின்றது. என்றெல்லாம் சில பேர் நிறைய பயப்படுவார்கள். இதெல்லாம் எதோ கண்ணுக்கு தெரியாத கெட்ட சாதியின் ஆதிக்கம் தான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்தும் வெளி வருவதற்கு இந்த தூபம் பெரிதும் உதவியாக இருக்கும்.

நமக்கு கெடுதல் செய்வதற்காக வரும் துர்சக்திகள் ஆத்மாக்கள் கூட நம் வீட்டிற்குள் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் நம் வீட்டில் இருப்பவர்களுக்கு கெட்டது செய்ய முடியாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய மர்மமான பிரச்சனைகளுக்குக் கூட நல்லதொரு தீர்வை பார்க்க முடியும்.

- Advertisement -