தீமைகள் விலக மகாலட்சுமி திலகம்

- Advertisement -

நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகளாலும் தீய நபர்களாலும் தான் நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் விலக வேண்டும். இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகள் விலகினாலே நாம் என்ன நினைத்து செயல்படுகிறோமோ அது கண்டிப்பான முறையில் நடைபெறும்.

இந்த அற்புதமான ஒரு ஆற்றலை நாம் பெறுவதற்கு இந்த திலகத்தை நம்முடைய நெற்றியில் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தொட்ட காரியம் துவங்க வேண்டும், நினைத்தது நடக்க வேண்டும், எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது, தீயவர்களால் எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது, நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டும், தீய ஆற்றலோ தீய எண்ணங்களோ நம்மை நெருங்கவே கூடாது என்று நினைப்பவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த திலகத்தை அமாவாசை, பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் செய்ய வேண்டும். இந்த திலகத்தை நாம் தயார் செய்வதற்கு நமக்கு ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் இருந்தால் போதும். இவை இரண்டுமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக திகழ்ந்தது. என்றைக்கு இந்த திலகத்தை நாம் தயார் செய்ய நினைக்கிறோமோ அன்றைக்கு காலையில் எழுந்து சுத்தமாக குடித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய அகலில் பச்சை கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பச்சை கற்பூரம் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது மகாலட்சுமியின் மந்திரமான “ஓம் ஸ்ரீம்” என்று கூறி ஏலக்காயை எரிகின்ற பச்சை கற்பூரத்தில் போட வேண்டும். இப்படி ஆறு முறை மந்திரத்தை கூறி ஆறு ஏலக்காய்களை போட வேண்டும். ஏலக்காய்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை பச்சை கற்பூரத்தை அதில் சேர்த்துக் கொண்டே இருங்கள்.

இப்படி அனைத்து ஏலக்காய்களும் எரிந்து சாம்பலான பிறகு இந்த சாம்பலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாம்பலை நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு காரிய வெற்றி உண்டாகும். இந்த சாம்பலை அப்படியே வைத்துக் கொள்வதற்கு பதிலாக சிறிது தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அரகஜா, நெய் போன்றவற்றில் கலந்து திலகமாக நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். அதே போல் நம்முடைய உச்சந்தலையிலும் தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

யாரும் இதை பார்க்கக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த திலகத்தின் மீது குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இந்த இரண்டு பொருட்களையும் மகாலட்சுமியின் மந்திரத்தை கூறி இந்த முறையில் சாம்பலாக்கி திலகத்தை நாம் தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாம்: கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்

மிகவும் அதி சக்தி வாய்ந்த மகாலட்சுமியின் திலகத்தை முழு நம்பிக்கையுடன் செய்து பயன்படுத்துவதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

- Advertisement -