எவ்வளவு பெரிய செய்வினையையும் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல், நம்மாலேயே அடித்து விரட்டி விட முடியும். உங்களுக்கு இந்த 1 இலை கிடைத்தால் போதும்.

thumbai
- Advertisement -

முதலில் பில்லி சூனியம் செய்வினை இவைகளை கண்டு பயந்து அஞ்சி, அறிமுகம் இல்லாதவர்களிடம் சென்று செய்வினையை எடுக்க, மருந்து எடுக்க, பேய் பிசாசை விரட்ட என்று சொல்லி நிறைய பணத்தை செலவு செய்யாதீர்கள். உங்களுடைய பயம் தான், உங்களுடைய பலவீனம். உங்களுக்கு எதுவும் இல்லை, நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்பினால் பிரச்சனையில் பாதி தீர்ந்து விடும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லக்கூடிய பழமொழியை நாம் கேள்விப்பட்டது இல்லையா. நாம் பயந்தால் நம் கண்ணுக்குத் தெரியும் இருட்டு கூட, பேய் ஆகத்தான் இருக்கும். பயத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும்.

thumbai-poo

சரி, மனதில் எந்த பயமும் இல்லை. ஆனால் வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தி இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தேகம் வந்துவிட்டது. இரவில் படுத்தால் நல்ல தூக்கம் வருவது கிடையாது. வீட்டில் கெட்ட சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. யார் காதுக்கும் கேட்காத சில சத்தங்கள் உங்களுடைய காதுகளுக்கு மட்டும் கேட்கின்றது. இதற்கெல்லாம் என்ன தீர்வு வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை எப்படி விரட்டுவது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை முதலில் நீங்கள் உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து இந்த கண்ணாடி தம்ளரை வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் இந்த கண்ணாடி டம்ளர் தண்ணீர் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை அந்த தண்ணீர் கருப்பு நிறமாக மாறி இருந்தால் உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டு என்று அர்த்தம். சரி அதைக் கண்டு பயப்பட வேண்டாம். அந்த எதிர்மறை ஆற்றல் கண் திருஷ்டி ஆக கூட இருக்கலாம்.

lemon

இந்த எதிர்மறை ஆற்றலை விரட்ட மிக மிக சுலபமான வழியை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பெருந்தும்பை இலை என்று ஒரு மூலிகை உள்ளது. இது அற்புதம் வாய்ந்த பல மகத்துவங்களைக் கொண்ட மூலிகை. சில பேர் இதை பேய் மிரட்டி என்றும் சொல்லுவார்கள். கிராமப்புறங்களில் இது நிறைய கிடைக்கும். பெரியவர்களிடம் கேட்டு இந்த இலையை கண்டுபிடித்து பறித்து வாருங்கள்.

- Advertisement -

இந்த இலையை நிழலிலேயே நன்றாக உலர வைத்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். சாம்பிராணி தூபம் போடுவது போல ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்தப் பெரும் தும்பை இலை பொடியை மட்டும் நெருப்பில் போட்டு புகை வரவழைத்து அந்தப்புகையை வீட்டின் மூலை முடுக்குகளில் முழுவதும் காண்பிக்க வேண்டும். ஐந்து நாட்களும் மாலை நேரத்தில் போட்டாலும் சரி தான் காலை நேரத்தில் இந்த புகையை போட்டாலும் சரி தான்.

dhupam

ஐந்து நாட்கள் முடிந்த பின்பு மீண்டும் ஒரு டம்ளரில் தண்ணீரில் கல் உப்பை போட்டு, அந்த தண்ணீரை வீட்டில் அதே மூலையில் வைத்துப் பாருங்கள்‌. நிச்சயமாக அந்த டம்ளர் தண்ணீரின் நிறம் மாறாது. உங்கள் வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அது உங்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும். இது ஒரு வழி.

pei-viratti3

அப்படி இல்லையென்றால் பெருந்தும்பை இலையை திரி போல் திரித்து ஒரு மண் அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி இந்த பெருந்தும்பை இலையை திரியாக போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். பூஜை அறையில் வைக்க வேண்டாம். தொடர்ந்து இப்படி 3 நாட்கள் உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி வந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மிகவும் தாங்க முடியாத பிரச்சினை என்றால் பெருந்தும்பை இலைகளை பறித்து மாலையாக தொடுத்து உக்கிரமான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு இந்த மாலையை செலுத்தலாம். செலுத்திய மாலையை மீண்டும் வீட்டிற்கு வாங்கி வந்து, உங்கள் வீட்டு வாசல்படியில் கட்டி தொங்க விடலாம். இப்படி செய்தாலும் செய்வினை பாதிப்புகள் கண்திருஷ்டி பாதிப்புகள் எதிர்மறை ஆற்றலினால் வரக்கூடிய பிரச்சினைகள் நீங்கும். மேலே சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை முயற்சி செய்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -