கெட்ட சக்தியை விரட்ட தூபம் போடும் முறை

dhupam1
- Advertisement -

நமக்கு ஒரு சில நாட்களாக மனசு சரியில்லை. வீட்டில் சின்ன சின்ன குழப்பங்கள் வருகிறது. நிம்மதியை கெடுக்கும் வகையில் யாராவது ஒருவர் வந்து சண்டை போடுகிறார்கள். சிவனே என்று வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். நிம்மதி இல்லை. தூக்கம் இல்லை. வீட்டில் கணவன் மனைவிக்கிடையும் சண்டை சச்சரவு.

வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கெட்டது நடக்குதுன்னு நாம தெரிஞ்சுகிட்டோம். என்ன செய்வது. இதையெல்லாம் சரி செய்ய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க, எளிமையான முறையில் ஒரு ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க மன நிம்மதி பெற பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய கட்டாயம் காய்ந்த யானை சாணம் தேவை. கோவில்களில் யானை இருக்கும். அந்த யானை பாகனிடம் கேட்டால் இந்த சாணத்தை உங்களுக்கு அவர் கொடுத்துவிடுவார். காய்ந்த யானை சாணத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். இதோடு வெண்கடுகு, பிரியாணி இலையை சேர்த்து சாம்பிராணி தூபம் போட வேண்டும். வழக்கம் போல சாம்பிராணி தூபம் போடுவீங்க.

அதில் இந்த மூன்று பொருளையும் சேர்த்து சாம்பிராணி தூபம் போட வேண்டும். இதற்கு இன்னும் ஒரு முக்கியமான பொருள் தேவை. பூஜை மணி, பெரும்பாலும் பித்தளையில் நம்முடைய வீடுகளில் மணி இருக்கும். சில பேர் வெள்ளியில் கூட மணி வாங்கி வச்சிருப்பாங்க. ஆனால் இந்த பரிகாரத்திற்கு வெண்கலத்தில் மணி தேவை. வெண்கல உலோகத்தால் செய்யப்பட்ட மணி.

- Advertisement -

இந்த சத்தத்திற்கு வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தி, பேய், பிசாசு, ஆவி, செய்வினை எல்லாம் அடித்து பிடித்து வெளியே ஓடிவிடும். இந்த மணி ஒலிக்கு அத்தனை சக்தி இருக்கிறது. வீட்டிற்கு வெளியே போயிருங்க. நிலை வாசலுக்கு வெளியே நின்று ஒரு கையில் சாம்பிராணி தூபம் போடும் கரண்டி, ஒரு கையில் மணி இருக்குது.

தயாராக இருக்கும் காய்ந்த யானை சாணம், வெண்கடுகு, பிரியாணி இலை, மூன்றையும் சேர்த்து இதில் போட்டு சாம்பிராணி தூபப் பொடியையும் போட்டு புகையை வர வையுங்கள். வீட்டிற்கு வெளியே இருந்து நிலை வாசலில் இந்த புகையை காண்பித்து, அப்படியே வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் இந்த புகையை காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த புகை போடும்போது உங்கள் கையில் அந்த வெண்கல மணி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான். வாரம் தோறும் இரண்டு நாட்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இந்த தூபத்தை வீட்டில் போட்டாலே போதும் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் வெளியே செல்லும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியே செல்லும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்க வடகிழக்கு மூலை வாஸ்து.

வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எளிமையான பரிகாரம் தான். சிரமம் பார்க்காமல் பிரச்சனை இருப்பவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -